அதிரை நியூஸ்: மார்ச்-30
அமீரகத்திற்கு வர விரும்பும் இந்தியர்கள் முன்கூட்டியே விசா பெற விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையில் ஒரு சிறப்பு சலுகையை அமீரக அமைச்சரவை வழங்கியுள்ளது.
இந்த புதிய சலுகையின்படி, குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்கா விசா அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டும் அமீரகத்தின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள், தரைவழி உள்நுழைவு மையங்கள் வழியாகவும் வருகை தந்த பின் On Arrival முறையில் 14 நாட்களுக்கான விசாவை பெற்று உள்நுழையலாம், மேலும் ஒருமுறை மட்டும் 14 நாட்களுக்கு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி நீட்டித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த வருடம் மட்டும் 1.6 மில்லியன் இந்தியர்கள் அமீரகத்திற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்துள்ளனர், அதேவேளை சுமார் 50,000 அமீரகத்தினர் இந்தியாவிற்கு வந்துள்ளனர். இருநாடுகளுக்கு இடையேயும் தினமும் சுமார் 143 விமான சேவைகள் அதாவது வாரத்திற்கு சுமார் 1,000 சேவைகள் நடைபெறுகின்றன.
ஏற்கனவே, வளைகுடா நாடுகளை தவிர்த்து 47 சர்வதேச நாடுகளுக்கு 90 நாட்களுக்கான ஆன் அரைவல் (On Arrival) விசா வசதியையும், அதிலும் சில நாடுகளுக்கு 30 நாட்களுக்கான ஆன் அரைவல் விசா வசதிகளையும் அமீரகம் வழங்கி வருகிறது.
கூடுதல் தகவல்கள்:
உலகளவில் இந்தியாவே அமீரகத்தின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக திகழ்கிறது. சமீபத்திய புள்ளிவிபரப்படி ஆண்டுக்கு 60 பில்லியன் டாலர் (220 பில்லியன் திர்ஹம்) அளவுக்கு வர்த்தகங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது இந்தியாவின் ஏற்றுமதி 33 பில்லியன் டாலர் (121 பில்லியன் திர்ஹம்) அளவிற்கும், அமீரகத்தின் ஏற்றுமதி 27 பில்லியன் டாலர் (99 பில்லியன் திர்ஹம்) அளவிற்கும் நடந்துள்ளது.
அமீரகத்தில் சுமார் 45,000 இந்திய நிறுவனங்கள் வழியாக 70 பில்லியன் டாலர் (257 பில்லியன் திர்ஹம்) அளவிற்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை இந்தியாவில் 10 பில்லியன் டாலர் (36 பில்லியன் திர்ஹம்) அளவிற்கே முதலீடு செய்யப்பட்டுள்ளன. அந்த முதலீடுகள் கூட எரிசக்தி, உலோகம், கட்டுமானம், தொழிற்நுட்பம் மற்றும் சேவை துறைகளிலேயே செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமீரகத்திற்கு வர விரும்பும் இந்தியர்கள் முன்கூட்டியே விசா பெற விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையில் ஒரு சிறப்பு சலுகையை அமீரக அமைச்சரவை வழங்கியுள்ளது.
இந்த புதிய சலுகையின்படி, குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்கா விசா அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டும் அமீரகத்தின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள், தரைவழி உள்நுழைவு மையங்கள் வழியாகவும் வருகை தந்த பின் On Arrival முறையில் 14 நாட்களுக்கான விசாவை பெற்று உள்நுழையலாம், மேலும் ஒருமுறை மட்டும் 14 நாட்களுக்கு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி நீட்டித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த வருடம் மட்டும் 1.6 மில்லியன் இந்தியர்கள் அமீரகத்திற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்துள்ளனர், அதேவேளை சுமார் 50,000 அமீரகத்தினர் இந்தியாவிற்கு வந்துள்ளனர். இருநாடுகளுக்கு இடையேயும் தினமும் சுமார் 143 விமான சேவைகள் அதாவது வாரத்திற்கு சுமார் 1,000 சேவைகள் நடைபெறுகின்றன.
ஏற்கனவே, வளைகுடா நாடுகளை தவிர்த்து 47 சர்வதேச நாடுகளுக்கு 90 நாட்களுக்கான ஆன் அரைவல் (On Arrival) விசா வசதியையும், அதிலும் சில நாடுகளுக்கு 30 நாட்களுக்கான ஆன் அரைவல் விசா வசதிகளையும் அமீரகம் வழங்கி வருகிறது.
கூடுதல் தகவல்கள்:
உலகளவில் இந்தியாவே அமீரகத்தின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக திகழ்கிறது. சமீபத்திய புள்ளிவிபரப்படி ஆண்டுக்கு 60 பில்லியன் டாலர் (220 பில்லியன் திர்ஹம்) அளவுக்கு வர்த்தகங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது இந்தியாவின் ஏற்றுமதி 33 பில்லியன் டாலர் (121 பில்லியன் திர்ஹம்) அளவிற்கும், அமீரகத்தின் ஏற்றுமதி 27 பில்லியன் டாலர் (99 பில்லியன் திர்ஹம்) அளவிற்கும் நடந்துள்ளது.
அமீரகத்தில் சுமார் 45,000 இந்திய நிறுவனங்கள் வழியாக 70 பில்லியன் டாலர் (257 பில்லியன் திர்ஹம்) அளவிற்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை இந்தியாவில் 10 பில்லியன் டாலர் (36 பில்லியன் திர்ஹம்) அளவிற்கே முதலீடு செய்யப்பட்டுள்ளன. அந்த முதலீடுகள் கூட எரிசக்தி, உலோகம், கட்டுமானம், தொழிற்நுட்பம் மற்றும் சேவை துறைகளிலேயே செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.