.

Pages

Wednesday, March 29, 2017

அதிரை அருகே வாகன விபத்தில் ஓட்டுநர் உட்பட 2 பேர் பலி:12 பேர் காயம் (படங்கள்)

மல்லிபட்டினம், மார்ச்-29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டை அடுத்த தலையாமங்கலம் பகுதியை சேர்ந்த சிலர் குடும்பமாக சேர்ந்து டவேரா சொகுசு காரில் இராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். புதன்கிழமை அதிகாலை சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள சுப்பம்மாள்சத்திரம் என்ற இடத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது, காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் கண் அயர்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இவ்விபத்தில் காரை ஓட்டிச்சென்ற திருவையாறு தாலுகா அல்லூர் பகுதியை சேர்ந்த கரிகாலன் மகன் திருமாவளவன் (வயது 30), பருத்திக்கோட்டை பகுதியை சேர்ந்த சின்னையன் மகன் செந்தில்குமார் (வயது 25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் காரில் பயணம் செய்த பொன்னாப்பூர் நாகராஜ் மனைவி உமா(வயது 40), மகள் மேனகா( வயது 17), மகன் கர்ணன் (வயது 16), தலையாமங்கலம் முத்துசாமி மகன் விஜயகுமார் (வயது 36),  அவரது மனைவி பொன்னி ( வயது 32), இவர்களது மகள் அஸ்ரா ( வயது 1), இதே பகுதியை சேர்ந்த அர்ச்சுனன் மகன் சுரேஷ் (வயது 34), பருத்திக்கோட்டை பகுதியை சேர்ந்த வீரையன் மகன்  சின்னையன்( வயது 47) இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 44), சேதுராயன்குடிக்காடு பழனிவேலு மகன் சாய்பிரியன்( வயது 3), தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சங்கிலி மகன் குமாரவேல் (வயது 48) உள்ளிட்ட 12 பேர் பலத்த காயமடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானோர் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.