தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் ரயிலடியில் உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (23.02.2017) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியானது ரயிலடி தொடங்கி முக்கிய வீதிகளில் வழியாக பழைய பேருந்து நிலையம் அரண்மனையில் நிறைவடைந்தது. இப்பேரணியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி, வீரராகவா மேல்நிலைப்பள்ளி, அரசர் மேல்நிலைப்பள்ளி, தூய பேதுரு மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்தவ பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவர் லேடி காலேஜ் ஆப் நர்சிங் மற்றும் மேம்பாலம் அரசு நிலைப்பள்ளிகளை சேர்ந்த 700க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது விழிப்புணர்வு பதாகைகள், நீரின் பயன்பாட்டிற்கும் நீரின் செறிவூட்டலுக்கும் இடையே உள்ள இடைவெளியை களைய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுவோம், நிறுவப்பட்ட கட்டமைப்புகளை புனரமைப்போம், நில வளம், நீர் வளம் காப்போம், மழை நீர் உயிர் நீர் மழை நீரைச் சேகரிப்பீர், வானத்தின் மழைத் துளி, வையத்தின் உயிர்த்துளி, வான் தந்த மழை காப்போம், வாழ்விற்கு வளம் சேர்ப்போம், விண்ணின் மழைத்துளி, மண்ணின் உயிர்த்துளி, வீட்டு ஒரு மரம் வளர்ப்போம் போன்ற விழிப்புணர்வு கோஷங்கள் கூறியபடி பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மகளிர் திட்ட இயக்குநர் பி.ஜே.ரேவதி, முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாநகராட்சி ஆணையர் வரதராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் வி.இராமலிங்கம், ஊராட்சி உதவி இயக்குநர் கு.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பேரணியானது ரயிலடி தொடங்கி முக்கிய வீதிகளில் வழியாக பழைய பேருந்து நிலையம் அரண்மனையில் நிறைவடைந்தது. இப்பேரணியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி, வீரராகவா மேல்நிலைப்பள்ளி, அரசர் மேல்நிலைப்பள்ளி, தூய பேதுரு மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்தவ பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவர் லேடி காலேஜ் ஆப் நர்சிங் மற்றும் மேம்பாலம் அரசு நிலைப்பள்ளிகளை சேர்ந்த 700க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது விழிப்புணர்வு பதாகைகள், நீரின் பயன்பாட்டிற்கும் நீரின் செறிவூட்டலுக்கும் இடையே உள்ள இடைவெளியை களைய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுவோம், நிறுவப்பட்ட கட்டமைப்புகளை புனரமைப்போம், நில வளம், நீர் வளம் காப்போம், மழை நீர் உயிர் நீர் மழை நீரைச் சேகரிப்பீர், வானத்தின் மழைத் துளி, வையத்தின் உயிர்த்துளி, வான் தந்த மழை காப்போம், வாழ்விற்கு வளம் சேர்ப்போம், விண்ணின் மழைத்துளி, மண்ணின் உயிர்த்துளி, வீட்டு ஒரு மரம் வளர்ப்போம் போன்ற விழிப்புணர்வு கோஷங்கள் கூறியபடி பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மகளிர் திட்ட இயக்குநர் பி.ஜே.ரேவதி, முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாநகராட்சி ஆணையர் வரதராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் வி.இராமலிங்கம், ஊராட்சி உதவி இயக்குநர் கு.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.