திமுக மாநில பொருளாளர் மு.க ஸ்டாலின் 65-வது பிறந்த நாளையொட்டி திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் அதிரை பேருந்து நிலையத்தில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அக்கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றிய சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் கே. இத்ரீஸ் அகமது தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியச் செயலாளர் ஏனாதி பா. இராமநாதன், அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அக்கட்சியின் தலைமைப் பேச்சாளர் நாகை நாகராஜ் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் மாற்று கட்சிகளைச் சேர்ந்த 3 பேர் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
கூட்டத்தில் திமுக அதிரை பேரூர் பொருளாளர் கோடி முதலி, துணைச் செயலாளர் அன்சர்கான், டி. சபீர், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, மீனவரணி பொறுப்பாளர் சுப்பிரமணி, வார்டு பொறுப்பாளர்கள் முத்துராமன், இப்ராஹீம், முஹம்மது சரிப், செய்யது முகம்மது உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.