துபையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் மனிதவளத்திற்கு பதிலாக 'செயற்கை நுண்ணறிவு' (Artificial Intelligence - AI) ஊட்டப்பட்ட 50 சதவீத ரோபோ இயந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டு அதற்கான பயிற்சிகளை AI இயந்திரங்களை கையாளும் 200 அலுவலர்களுக்கு முதற்கட்டமாக அடுத்த மாதம் முதல் வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் படிப்படியாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
அரசு மற்றும் தனியார் துறைகளில் ரோபோ பயன்பாடு தவிர்க்க முடியாதவை என்றும், மனிதர்களைப் போல் அல்லாமல் ஒரு சில நிமிடங்களிலேயே தனக்கு தேவையான உலகளாவிய தகவல்களை திரட்டிக் கொள்ள வல்லவை என்றும், ரோபோக்கள் தங்களது பணிகளில் தவறு செய்யாதவை என்பதாலும், இந்த இயந்திர மனிதர்களை தொழிற்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அவ்வப்போது நுண்ணறிவை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றும் ஸ்மார்ட் துபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
We the (South) Indians are the real robots... No doubt...the uae govt is comparing our handwork with robotic work system...great comparison... We from the great nation ...INDIANS
ReplyDelete