.

Pages

Monday, March 20, 2017

சவூதியில் வெளிநாட்டவர்கள் நேரடியாக வியாபாரம் செய்ய அனுமதிக்கும் திட்டம் !

அதிரை நியூஸ்: மார்ச்-20
சவுதியில் இதுவரை யாராவது ஒரு வெளிநாட்டவர் சொந்தமாக வியாபாரம் செய்வதாக இருந்தால் சவுதி நாட்டவர் ஒருவரின் பெயரில், அவருடைய ஸ்பான்சரின் கீழ் தான் வியாபாரம் செய்ய முடியும், அதற்காக குறிப்பிட்ட தொகையையும் (Tasattur) சவுதி ஸ்பான்சர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நடைமுறையே உள்ளது.

இந்த நடைமுறையை மாற்றி சவுதிக்களின் ஸ்பான்சர் தேவையின்றி வெளிநாட்டவர்களை நேரடியாக வியாபாரம் செய்ய அனுமதித்தும், தொழில் அமைவிடம் மற்றும் தொழிலை பொறுத்து சுமார் 20 சதவிகிதம் வரியை அரசாங்கமே வசூலித்துக் கொள்ளவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வியாபாரம் செய்யும் வெளிநாட்டவர்களிடமிருந்து 2 வகையில் வரிகளைப் பெற தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது. முதலாவதாக, நம் நாட்டில் உள்ளது போல் முதலீடு, வரவு செலவுகள், லாபம் ஆகியவற்றை கருத்திற் கொண்டும், இரண்டாவதாக, செய்யும் தொழில் மற்றும் இடத்திற்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்படும் குறிப்பிட்ட வரியை வசூலிப்பது (Fixed Tax), இந்த வரி விதிப்பு 15 முதல் 25 சதவிகிதத்திற்குள் இருக்கும்.

இந்த புதிய வரிச்சட்டம் நடைமுறைக்கு வரும்போது, தடையற்ற வர்த்தக பகுதிகளாக (Free Trade Area) அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பணிமனைகள் (Workshops), ஒப்பந்தப் பணிகள் (Contracts), உணவுத்துறை (Catering) மற்றும் இதர பணிகளுக்கு (Others) ஆரம்பமாக அனுமதி வழங்கப்படவுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.