.

Pages

Monday, March 20, 2017

காதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறையின் பயிற்சி பட்டறை நிறைவு விழா !

அதிராம்பட்டினம், மார்ச்-20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறை சார்பில் 'பயனுறு இயற்பியலின் சமீபத்திய முன்னேற்றங்கள்' என்ற தலைப்பில் 2 நாட்கள் நடந்த விரிவுரை பட்டறை
பயிற்சி நிறைவு விழா கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார். இயற்பியல் துறைத் தலைவர் ஆயிஷா மரியம் வரவேற்றுப் பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியர் பொற்செழியன், அருப்புக்கோட்டை தேவாங்க கலைக் கல்லுாரி முதல்வர் பி.ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பவர்பாயிண்ட் ஒளித்திரை மூலம் மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி அளித்தனர்.

இதில் 10 க்கு மேற்பட்ட கல்லுாரிகள் மற்றும் பல்கலை இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் பேராசிரியர் என். சேகர் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.