.

Pages

Sunday, March 19, 2017

தமிழறிஞர் அதிரை அஹமத்க்கு 'தமிழ்மாமணி' விருது அறிவிப்பு !

அதிராம்பட்டினம், மார்ச்-19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அதிரை அஹமத் ( வயது 69 ). தமிழ் இலக்கியங்கள் மீது அதிக பற்று கொண்ட இவர் எழுத்தாளர், கவிஞர், சமூக ஆர்வலர் ஆவார். சில ஆண்டு காலம் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்று மகளிர் கல்விப்பணியை போதித்தவர். அனைவராலும் 'தமிழ்அறிஞர்' என அன்புடன் அழைக்கப்படுபவர்.

அதிரையின் மூத்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இஸ்லாம் ஓர் அறிமுகம், இஸ்லாமிய இலக்கியச் சிந்தனை, மழைப்பாட்டு (உரை), Wisdom in the Dawn (English), இளமைப் பருவத்திலே (Wisdom in the Dawn  என்ற நூலின் மொழிபெயர்ப்பு), ஆயிஷாவின் சிறுமிப் பாட்டு (சிறுவர் மரபுக் கவிதைகள்), அரும்புப் பாட்டு (பதிப்பில்), பெண்மணி மாலை (மரபுக் கவிதைகள்), ஒருமைப் பாட்டு (மரபுக் கவிதைகள்), இறையருட்கவிமணி மாலை (மரபுக் கவிதைகள்), அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும், ஏசுவை நேசித்தேன் பேறு பெற்ற பெண்மணிகள் பாகம் -1, பேறு பெற்ற பெண்மணிகள் பாகம் – 2,நபி வரலாறு, நம் பிள்ளைகளுக்கு,  நபி வரலாறு (விரிவு), சல்மான் அல் ஃபாரிஸி ( மொழிபெயர்ப்பு ), அலீ பின் அபீதாலிபு,கப்பாப் இப்னுல் அறத்து ( மொழிபெயர்ப்பு ), அபூதர் அல்ஃகிஃபாரி. மிக்தாத் இப்னுல் அஸ்வத் (மொழிபெயர்ப்பு), இறைத்தூதர் முஹம்மத், வட்டியை ஒழிப்போம்! (மொழிபெயர்ப்பு), அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (இலக்கியச் சோலை), தொழுகையாளிகளே! (மொழிபெயர்ப்பு - மூலம்: அரபி), மொட்டுகளே மலருங்கள்! , கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை, நல்ல தமிழ் எழுதுவோம்!, ஈமான் – இஸ்லாம் கவி மலர்கள், நபி ( ஸல் ) வரலாறு, பேருபெற்ற பெண்மணிகள், மரபுக்கவிதைகள் உட்பட மொத்தம் 35 நூல்களை எழுதி உள்ளார்.

அதிரை சமுதாய நல மன்றம் – பத்தாம் ஆண்டு சிறப்பு மலர், ‘பிறை’ பத்திரிகை சார்பில் ‘அதிரை செக்கடிப் பள்ளி’ திறப்பு விழா மலர்,‘வேலூர் பாகியாத்துஸ் சாலிஹாத்’ நூற்றாண்டு விழா மலர், ‘சீறாப்புராணம்’ – நாச்சிகுளத்தார் வெளியீடு, அதிரை ஜீவரத்ன கவிராஜரின் ‘மழைப்பாட்டு’,.     ‘அல்லாமா அப்துல் வஹ்ஹாப்’ நினைவு மலர், முத்துப்பேட்டை ‘அல் மஹா மலர்கள்’ ஆகியவற்றை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் பல்வேறு தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளார். மேலும் மரபுக்கவிதை பலவற்றையும் எழுதி உள்ளார். பல நூல்களுக்கு வாழ்த்துரை வழங்கி உள்ளார்.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கவிஞர் முடியரசன் தலைமைமையில் கவியரங்கம், சென்னை காயிதே மில்லத் அரங்கு மீலாதுக் கவியரங்கம், ‘கவிக்கோ’ தலைமையில் ‘பொதிகை’ தொலைக்காட்சியில் ‘ரமழான்’ கவியரங்கு, 1972 – முதலாம் இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாடு, திருச்சி, 2007 -  இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஏழாவது மாநாடு, சென்னை, 2010 -  இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் 15 வது மாநாடு, அதிரை, 2011 -  இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் எட்டாவது மாநாடு, காயல்பட்டினம்  ஆகிய கருத்தரங்குகள், மாநாடுகளில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், காரைக்கால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் மாபெரும் மாநாடு எதிர்வரும் ஏப்-1, 2 ஆகிய தேதிகளில் பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது. இம்மாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ்அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இதில் தமிழ் இலக்கியச் சேவைக்காக, அதிராம்பட்டினம் தமிழ்அறிஞர் அதிரை அஹமத் அவர்கட்கு 'தமிழ்மாமணி' விருது வழங்கப்பட உள்ளது.

10 comments:

  1. மாஷா அல்லாஹ்! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் மிக்க மகிழ்ச்சி. உங்களைப்போன்ற அறிஞர்கள் இருப்பதால்தான் அதிரை இத்தகைய பெயரும்புகழும்பெற்று திகழ்கிறது.பன்முகம்கொண்ட உங்களது எழுத்துப்பணி தொடர்ந்து இன்னும் பல விருதுகள் பெற துவா செய்கிறேன்.

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் மிக்க மகிழ்ச்சி. உங்களைப்போன்ற அறிஞர்கள் இருப்பதால்தான் அதிரை இத்தகைய பெயரும்புகழும்பெற்று திகழ்கிறது.பன்முகம்கொண்ட உங்களது எழுத்துப்பணி தொடர்ந்து இன்னும் பல விருதுகள் பெற துவா செய்கிறேன்.உங்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் செய்வானாக.

    ReplyDelete
  5. என் இனிய நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வல்ல ரஹ்மான் இவர்கள் செய்த இஸ்லாமிய சேவைப் பணிகளை பொருந்தி கொள்வானாக.நீடூடி வாழ்க இவரும் இவர்களின் பணிகளும்.

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ் காக்கா இது உங்களுக்கு லேட்டாக கிடைத்துள்தென்று நான் கருதுகிறேன் பன்முகம் கொண்ட உங்களுக்கு இது எப்போதே கிடைத்திருக்க வேண்டும், லேட்டாக கிடைத்தாலும் லேடஸ்டாக நினைத்துக்கொள்கிறோன், தொடர்ந்து இன்னும் தாங்கள் பல விருதுகளை பெற வேண்டுமென்று து.ஆ செய்கிறேன். என் வாழத்துகள் காக்கா

    ReplyDelete
  8. இறையருட்கவிமணி தமிழ்ச் செம்மல் பேராசிரியர் அப்துல் கஃபூர் அவர்களின் பாசமிகு மாணவர், இருபத்திரண்டு வயதில் இஸ்லாமிய இலக்கிய சிந்தனை தொடரை பிறை பத்திரிக்கையில் தொடராய் தந்து பிறைபோல் வளர்ந்தவர் என் அருமை காக்கா அல்ஹாஜ் அதிரை அஹமத் அவர்கள்.

    இதுவரை 35 நூல்கள் படைத்துள்ளார். இனியும் இன்ஷா அல்லாஹ் படைக்கவிருக்கின்றார். பல தமிழ் பேறிஞர்களாலும் மார்க்க மேதைகளாலும் பாராட்டுக்கள் பல பெற்றவர்கள். பன்னூல் ஆசிரியர். நான் அறிந்தவரை அவர்கள் அறிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், அரபி, உருது மற்றும் மலையாளம்.

    இன்று இவர்களுக்கு கிடைத்திருப்பது தமிழ்மாமணி. இன்ஷா அல்லாஹ் இனி கலைமாமணி. எல்லாம் வல்ல அல்லாஹ் இன்னும் அவர்களின் இலக்கிய சமுதாய பணிகள் தொடர அருள் புரிவானாக.

    ReplyDelete
  9. இறையருட்கவிமணி தமிழ்ச் செம்மல் பேராசிரியர் அப்துல் கஃபூர் அவர்களின் பாசமிகு மாணவர், இருபத்திரண்டு வயதில் இஸ்லாமிய இலக்கிய சிந்தனை தொடரை பிறை பத்திரிக்கையில் தொடராய் தந்து பிறைபோல் வளர்ந்தவர் என் அருமை காக்கா அல்ஹாஜ் அதிரை அஹமத் அவர்கள்.

    இதுவரை 35 நூல்கள் படைத்துள்ளார். இனியும் இன்ஷா அல்லாஹ் படைக்கவிருக்கின்றார். பல தமிழ் பேறிஞர்களாலும் மார்க்க மேதைகளாலும் பாராட்டுக்கள் பல பெற்றவர்கள். பன்னூல் ஆசிரியர். நான் அறிந்தவரை அவர்கள் அறிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், அரபி, உருது மற்றும் மலையாளம்.

    இன்று இவர்களுக்கு கிடைத்திருப்பது தமிழ்மாமணி. இன்ஷா அல்லாஹ் இனி கலைமாமணி. எல்லாம் வல்ல அல்லாஹ் இன்னும் அவர்களின் இலக்கிய சமுதாய பணிகள் தொடர அருள் புரிவானாக.

    ReplyDelete
  10. அதிரை அஹமத் காக்காவிற்கு வாழ்த்துக்கள், இலக்கியத்திலும் மார்க்க பணியிலும் தூய்மையான சேவையை செய்து முத்திரை பதித்த அதிரையின் ஆளுமை
    எளிமையான அணுகுமுறை அடக்கமான அமைதியான பேச்சு எதிர்ப்படும் எவரையும் நேசிக்கும் மாண்பு என வசீகரிக்கும் குணம் காக்காவிடம் நான் பல கண்டுள்ளேன்.
    காலம் கடந்த அங்கீகாரம் என்றாலும் அவரின் ஆளுமை திறன் பலதரப்பை சென்றடையும் வாய்ப்பு என்றே எண்ணுகிறேன்.
    காக்காவை பலமுறை சந்தித்து உரையாடியுள்ளேன், அதிரையை அடையாளப்படுத்த அஹமது காக்காவின் பெயரையும் சில நேரம் உச்சரித்துள்ளேன்.
    அல்லாஹ் அஹமது காக்காவுக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் வழங்குவானாக
    பாராட்டு விழா இல்லை பண்பட்ட மனிதரை பாடமாக எதிர்கால தலைமுறை எண்ணுமளவிற்கு விழா எடுக்குமாறு அதிரைவாசிகளை கேட்டுக்கொள்கிறேன் , இது எனது ஆசை அல்ல , அதிரையின் ஆளுமையை அடையாளமாகும் தொடக்கம்
    ------------------------
    இம்ரான் கரீம் யூசுப்
    தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.