.

Pages

Tuesday, March 21, 2017

அமெரிக்காவில் எறும்புக்கு பயந்து வீட்டை கொளுத்திய இளைஞர் !

அதிரை நியூஸ்: மார்ச்-21
எலிக்கு பயந்து வீட்டை கொளுத்தினானாம் என்ற சொல்வழக்கை கேட்டிருப்போம், அதேபோல் சமீபத்தில் சிறுவர்கள் சிலர் ஒரு எலியின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்க, தீயிடப்பட்ட அந்த எலி அந்த சிறுவர்களின் வீட்டுக்குள்ளேயே ஓடியதால் அவர்களின் வீடே முழுவதும் எரிந்து சாம்பலான சம்பவமும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகளாக வலம் வந்ததை பார்த்திருப்பீர்கள்.

இன்று, அமெரிக்காவின் மைனே மாநிலத்தை (Maine State) சேர்ந்த 21 வயது இளைஞர் தனது வீட்டிலிருந்த எறும்புகளை கொல்வதற்காக தீக்குச்சியை கொளுத்திப் போட்டுள்ளார் அதனால் எதிர்பாராவிதமாக வீடே தீப்பற்றி எரிந்து முழுமையாக சம்பலாகியுள்ளது.

வீடு தீப்பற்றி எரியும் போது அவனது பெற்றோர்கள் வீட்டில் இல்லாததால் தப்பினர் ஆனால் அவர்கள் வீட்டு வளர்ப்புப் பிராணிகளான 2 பூனைகளும் 1 நாயும் உயிரிழந்துள்ளன. எனினும், எரிந்தது சொந்தவீடு என்பதால் அதிகாரிகள் வழக்கு ஏதும் பதியாமல் எச்சரித்துவிட்டுள்ளனர்.

நெருப்பால் பிற உயிரினங்களை எரிப்பது குறித்து இஸ்லாமிய சட்டம்....
“நெருப்பினால் யாரையும் – எந்த உயிரையும் தண்டிக்காதீர் கள். நெருப்பினால் வேதனையளிக்கும் தண்டனையைத் தருவது அதிபதியான இறைவனின் உரிமையாகும். (மனிதர் களுக்கு அந்த உரிமை இல்லை)” (ஆதார நூல்: அபூதாவூத்) (ஹதீஸ் சுருக்கம்)

“நெருப்பினால் கொலை செய்யாதீர்கள். நெருப்பால் தண்டிக்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியதாகும்.”

(புகாரி)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.