அதிரை நியூஸ்: மார்ச்-31
துபையின் ஷேக் ஜாயித் ரோட்டில் அல் ஜபீல் பார்க் ஸ்டார் கேட் அருகே துபை மாநகராட்சி சார்பாக கட்டப்பட்டு வரும் பிரேம் ( Frame ) டவர் பில்டிங்கின் பணிகள் நிறைவுறும் தருவாயை எட்டியுள்ளதுடன் அதன் இணைப்புப் பாலத்தின் கீழ் பதிக்கப்பட்டு வரும் தங்க நிற தகடுகளால் அப்பகுதியே தகதகவென மின்னுகிறது.
சுமார் 160 மில்லியன் திர்ஹம் திட்ட செலவில் 150 மீட்டர் உயரத்தில் இரட்டை கோபுரமாகவும், அகலத்தில் 93 மீட்டரிலும் இவ்விரு கோரங்களையும் இணைக்கும் பாலம் 100 மீட்டரிலும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த 50 மாடி கட்டிடப் பணிகள் 2013 ஆம் ஆண்டு கட்டத் துவக்கப்பட்டு தற்போது இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இணைப்பு பாலத்திலிருந்து துபையின் அழகை கண்டு ரசிக்கவும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தரை தளத்தில் பழைய துபை குறித்த நவீன கண்காட்சி அரங்குகள் அமையவுள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையின் ஷேக் ஜாயித் ரோட்டில் அல் ஜபீல் பார்க் ஸ்டார் கேட் அருகே துபை மாநகராட்சி சார்பாக கட்டப்பட்டு வரும் பிரேம் ( Frame ) டவர் பில்டிங்கின் பணிகள் நிறைவுறும் தருவாயை எட்டியுள்ளதுடன் அதன் இணைப்புப் பாலத்தின் கீழ் பதிக்கப்பட்டு வரும் தங்க நிற தகடுகளால் அப்பகுதியே தகதகவென மின்னுகிறது.
சுமார் 160 மில்லியன் திர்ஹம் திட்ட செலவில் 150 மீட்டர் உயரத்தில் இரட்டை கோபுரமாகவும், அகலத்தில் 93 மீட்டரிலும் இவ்விரு கோரங்களையும் இணைக்கும் பாலம் 100 மீட்டரிலும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த 50 மாடி கட்டிடப் பணிகள் 2013 ஆம் ஆண்டு கட்டத் துவக்கப்பட்டு தற்போது இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இணைப்பு பாலத்திலிருந்து துபையின் அழகை கண்டு ரசிக்கவும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தரை தளத்தில் பழைய துபை குறித்த நவீன கண்காட்சி அரங்குகள் அமையவுள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.