.

Pages

Sunday, March 26, 2017

காதிர் முகைதீன் கல்லூரி 62 வது ஆண்டு விழா நிகழ்ச்சி ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 62-வது நிறுவனர் நாள் மற்றும் கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி நிர்வாகி சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம். தணிகாசலம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் கல்லூரி ஆண்டரிக்கை வாசித்தார். இதில் கல்லூரி மாணவர்கள் நடப்பாண்டில் நிகழ்த்திய சாதனைகளை குறிப்பிட்டுப் பேசினார்.

முன்னதாக கல்லூரி  வணிக ஆட்சியியல் துறை பேராசிரியர் முகமது சித்திக் வரவேற்றுப் பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் (பொ) ஆர். திருமுருகன் கலந்துகொண்டு நிறுவனர் நாள் விழா உரையாற்றினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் எஸ். முத்துக்குமார் கல்லூரி நாள் விழா பேரூரையாற்றி பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற 20 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும் கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மற்றும் நூறு சதவிகிதம் கல்லூரிக்கு வருகை புரிந்த 150 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் மேஜர் முனைவர் எஸ்.பி கணபதி தொகுத்து வழங்கி, விழா முடிவில் நன்றி கூறினார். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.