நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் அதிரையர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
அதிரை அடுத்துள்ள பேராவூரணியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை வருகை தந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அதிரையர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். இதில், அதிரை பொதுநலன் சார்ந்த கோரிக்கைகள், அதிரையில் கிளை துவக்கம், புதிய அலுவலகம் திறப்பு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அழைத்து பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. சந்திப்பில், சமூக ஆர்வலர்கள் ஜியாவுதீன், சம்சுதீன், மீராஷா, இப்ராஹீம், சைஃபுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
"சீறி பாயும் சிங்கம் , சீறாமல் பாயும் எங்கள் சீமான்" என்று சொல்ல அதிரையர்கள் களமிறங்கிவிட்டார்களா? சீமான் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் பல வழக்கு... விஜயலக்ஷ்மி என்ற நடிகையை காதலித்து கைவிட்டதாக வழக்கு ..... காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்தவர் இப்போ சிறுபான்மையருக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் இல்லை ..சிவகங்கையில் மீத்தேன் ஆய்வு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன், ராமேஸ்வரத்தில் ஐந்து மீனவர்கள் தூக்கு தண்டனைக்கு எதிராக போராடிய அம்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் சிறை சென்ற போது அமைதி காத்தவர் தான் இந்த சீமான்.., ஆனால் அதிரையர்கள் இவரிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?? தங்களுக்கு முகவரியை தேடிக்கொள்கிறார்களா? கஷ்டப்பட்டு வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை தங்களுக்கு விரும்பிய தொழில்.., சமூக சேவை இதில் பயன்படுத்தலாமே? ஒவ்வொருவரும் சீமானை கட்டிப்பிடித்து.. போட்டோவை எடுத்துக்கொண்டு தம்பட்டம் அடிப்பதில் அப்படி என்ன ஆனந்தம்? ஓன்று மட்டும் புரியுது தெருவிற்கு ஒரு ஆலிம் இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் வீட்டுக்கு வீடு ஒரு அரசியல் பிரமுகர் ..தொண்டன்... கொடி பிடிக்க சிறுவன்.. இருக்கிறார்கள். ஆலிம் நிறைந்த அதிரையில் இப்போ அரசியல் சாக்கடை .., சமுதாய நோக்கத்துடன் சிந்தியுங்கள் .., விடை கிடைக்கும்.
ReplyDelete