.

Pages

Monday, July 10, 2017

அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் 'ஈஸ்ட் கோஸ்ட் அகதெமி' கல்வி நிறுவன அறிமுக நிகழ்ச்சி ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூலை 10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையையொட்டி ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சி பகுதியில், அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளையின், 'ஈஸ்ட் கோஸ்ட் அகதெமி' சிபிஎஸ்இ கல்விக்கூடம் கடந்த ஜூன் 28ந் தேதி புதிதாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கல்வி நிறுவனத்தின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கல்வி நிறுவனத்தின் அறிமுக நிகழ்ச்சி அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித்தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்து அறிமுக உரை நிகழ்த்தினார். அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத், செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

'ஈஸ்ட் கோஸ்ட் அகதெமி' சிபிஎஸ்இ பள்ளி இயக்குனர் டி.வி ரேவதி கலந்துகொண்டு கல்வி நிறுவனத்தின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

அதிரை பைத்துல்மால் துணைத் தலைவர்கள் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன். வழக்குரைஞர் அப்துல் முனாப், அப்துல் மாலிக் மற்றும் நாவலர் நூர் முஹம்மது, மவ்லவி அப்துல் காதர், ரியாத் கிளை நிர்வாகி அப்துல் ஜலீல், சமூக ஆர்வலர் பேராசிரியர் காதர் உள்ளிட்ட பலர் கருத்துரைகள் வழங்கினார்கள். மேலும் கூட்டத்தில் கல்வி நிறுவனத்தின் நோக்கம் மற்றும் நவீன கட்டமைப்பு வசதி குறித்து பவர் பாயிண்ட் ஒளித்திரை மூலம் விளக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.