அதிரை நியூஸ்: அக்.01
அமீரகம், ராஸ் அல் கைமா மார்டிர்ஸ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு ட்ரக்குகள் மோதிக்கொண்டு தீ பற்றி எரிந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த சிங் என்ற ஓட்டுநரின் உடலில் தீ பற்றி எரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது காரில் சென்றுகொண்டிருந்த ஜவஹர் சைப் அல் குமைத்தி (22) என்ற அமீரகப் பெண், தான் அணிந்து இருந்த புர்க்காவை கழட்டி ஓட்டுநரின் உடலில் மளமளவென பரவிய தீயை அணைத்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயில் படுகாயமடைந்த ஓட்டுநர் சிங்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிங் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரிதமாக செயல்பட்டு, ஒரு உயிரைக் காப்பாற்ற உதவிய ஜவஹரின் துணிச்சலைப் பாராட்டி, ராஸ் அல் கைமா சிவில் பாதுகாப்பு இயக்குநர் பிரிகேடியர் முகமது அப்துல்லா அல் ஜாபி, துறை தலைமையகத்தில் ஜவஹர் மற்றும் அவரது தந்தையை வரவழைத்து கெளரவித்தார். மேலும் சமூக வலைதளங்களில் இப்பெண்ணிற்கு பாராட்டு குவிந்து வருகிறது.
Source : Khaleejtimes
அமீரகம், ராஸ் அல் கைமா மார்டிர்ஸ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு ட்ரக்குகள் மோதிக்கொண்டு தீ பற்றி எரிந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த சிங் என்ற ஓட்டுநரின் உடலில் தீ பற்றி எரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது காரில் சென்றுகொண்டிருந்த ஜவஹர் சைப் அல் குமைத்தி (22) என்ற அமீரகப் பெண், தான் அணிந்து இருந்த புர்க்காவை கழட்டி ஓட்டுநரின் உடலில் மளமளவென பரவிய தீயை அணைத்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயில் படுகாயமடைந்த ஓட்டுநர் சிங்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிங் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரிதமாக செயல்பட்டு, ஒரு உயிரைக் காப்பாற்ற உதவிய ஜவஹரின் துணிச்சலைப் பாராட்டி, ராஸ் அல் கைமா சிவில் பாதுகாப்பு இயக்குநர் பிரிகேடியர் முகமது அப்துல்லா அல் ஜாபி, துறை தலைமையகத்தில் ஜவஹர் மற்றும் அவரது தந்தையை வரவழைத்து கெளரவித்தார். மேலும் சமூக வலைதளங்களில் இப்பெண்ணிற்கு பாராட்டு குவிந்து வருகிறது.
Source : Khaleejtimes
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.