தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூரைச்
சேர்ந்தவர் மைதீன் (வயது 37). இஸ்லாமிய ஜனநாயக முன்னணி ( IJM ) என்ற அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இந்நிலையில், மதுக்கூர் சிவக்கொல்லை பகுதியில் உள்ள இரு சக்கர பழுதுபார்ப்பு நிலையத்தில் திங்கள்கிழமை இரவு அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இவரை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு, அதே ஆட்டோவில் தப்பிச் சென்றனர். இதில், பலத்தக் காயமடைந்த மைதீன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுக்கூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteமர்மநபர்கள் தப்பிச்சென்றார்களா ..., அவர்களைப்பற்றி அதிகமாக வலைத்தளத்தில் வருகிறது., சமுதாய அமைப்பு என்று சொல்லி இப்போ ரவுடி அமைப்பாக போய்க்கொண்டிருக்கு., மற்றவரின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்லுது இஸ்லாம்., அதனைப்பின்பற்றுபவர்கள் செய்யும் செயலா இது., விசாரணையில் உண்மை வரும் ஆனால் இங்கே வராது.