.

Pages

Tuesday, October 31, 2017

மதுக்கூர் மைதீன் படுகொலை ~ மர்ம நபர்களின் வெறிச்செயல்

மதுக்கூர், அக்.31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூரைச்
சேர்ந்தவர் மைதீன் (வயது 37). இஸ்லாமிய ஜனநாயக முன்னணி ( IJM ) என்ற அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இந்நிலையில், மதுக்கூர் சிவக்கொல்லை பகுதியில் உள்ள இரு சக்கர பழுதுபார்ப்பு நிலையத்தில் திங்கள்கிழமை இரவு அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இவரை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு, அதே ஆட்டோவில் தப்பிச் சென்றனர். இதில், பலத்தக் காயமடைந்த மைதீன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுக்கூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    மர்மநபர்கள் தப்பிச்சென்றார்களா ..., அவர்களைப்பற்றி அதிகமாக வலைத்தளத்தில் வருகிறது., சமுதாய அமைப்பு என்று சொல்லி இப்போ ரவுடி அமைப்பாக போய்க்கொண்டிருக்கு., மற்றவரின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்லுது இஸ்லாம்., அதனைப்பின்பற்றுபவர்கள் செய்யும் செயலா இது., விசாரணையில் உண்மை வரும் ஆனால் இங்கே வராது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.