அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த 'பட்டத்து லெப்பை' என்கிற மர்ஹூம் ஹவ்து முகமது ஆலிம் அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது இப்ராஹீம் லெப்பை ஆலிம், மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் லெப்பை ஆலிம், மர்ஹூம் முகமது புஹாரி ஆலிம் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் அபுசாலிகு நானா அவர்களின் மருமகளும், மர்ஹூம் பிச்சை தம்பி அவர்களின் மனைவியும், முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மாமியாரும், பசீர் அகமது, அகமது ஜலாலுதீன், அகமது பத்ரூதீன், நிஜார் முகமது, முகமது சாதிக், முகமது சித்திக் ஆகியோரின் பாட்டியாருமான முகமது மரியம் அவர்கள் இன்று அதிகாலை சின்ன நெசவுக்காரத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று (24-10-2017) மாலை 4 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
This comment has been removed by the author.
ReplyDelete