.

Pages

Wednesday, April 4, 2018

சவுதியில் 25 ஆண்டுகளாக நோயுற்ற கணவனை கண்மணி போல் பாதுகாத்து வரும் பெண்மணி!

அதிரை நியூஸ்: ஏப்.04
சவுதியில் 25 ஆண்டுகளாக நோயுற்ற கணவனை கண்மணி போல் பாதுகாத்து வரும் பெண்மணி

சவுதி அரேபியாவில் குடும்ப வாழ்வுக்குள் நிகழும் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் பலவற்றையும் வெளியுலகம் அறிந்து கொள்வது என்பது மிகவும் அரிதாகும். இவ்வரிய செய்தி ஒன்றை அவருடைய மகளே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டதன் மூலம் படிப்போரின் நெஞ்சங்கள் ஒருமுறையாவது விம்மி எழுவது நிச்சயம்.

ஹத்தான் அஸாலி என்ற அந்த மகளார் தன் தாய், தந்தையின் படத்துடன் டிவிட்டரில் பகிர்ந்திருப்பதாவது, 
//ஒரு உண்மையை சிலர் மட்டுமே அறிவர்! என்னுடைய தந்தையால் மூட்டுக்களை அசைக்கவோ (எழுந்து நடமாடவோ) அல்லது பேசவோ இயலாத நிலையில் படுத்த படுக்கையிலேயே உள்ளார். அவர் தொண்டைக்குள் சொறுகப்பட்டுள்ள குழாயின் வழியாகவே சுவாசிக்கின்றார், உணவு கூட குழாய்களின் வழியாகவே செலுத்தப்படுகின்றது. கடந்த 25 ஆண்டுகளாக இந்த நிலையிலேயே எங்கள் தாய்; எங்களை வளர்த்து ஆளாக்கினார் எங்களுடைய தந்தையையும் குறையின்றி கவனித்துக் கொண்டார் இன்னும் கவனித்தும் வருகிறார். தற்போதும் எங்களைப் போலவே தனது பேரக்குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறார். இப்போது சொல்லுங்கள்! இந்த தியாகத்தாயை போற்ற ஆண்டிற்கு ஒரு 'மதர்ஸ் டே' போதுமா? என வினவியுள்ளார்//

இந்த பதிவு பம்பரமாய் சுற்றி வருவதுடன் அந்த தாய் தந்தைக்காக பலரது மனமுவந்த பிரார்த்தனைகளையும் தொடர்ந்து பெற்றுத் தந்து வருகிறது. நாங்களும் பிரார்த்திக்கின்றோம் எங்களுடைய தாய் தந்தைக்கும் சேர்த்து!

Sources: StepFeed / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.