.

Pages

Wednesday, April 4, 2018

அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின்(AAF) ~ 2018ம் ஆண்டு முதல் காலாண்டு சந்திப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஏப்.04
அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு  அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) தொடங்கப்பட்டது. இதையடுத்து கால் ஆண்டிற்கு ஒரு முறை அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடி தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதுடன் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்வது வழக்கம். குறிப்பாக பெருநாள் பண்டிகைகள், விடுமுறை தின காலங்களில் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதன்படி, அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் (AAF) 2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக் கூட்டம் கலிபோர்னியா மாகானம் வல்லோஹோ நகரில் உள்ள இஸ்லாமிக் சென்டரில் கடந்த [ 01-04-2018 ] ஞாயிறு மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

நிகழ்ச்சியை, இக்பால் M. சாலிஹ் புதல்வர் இஸ்மாயில் இக்பால் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, AAF துணைத் தலைவர் சலீம் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், AAF நிதி நிலை அறிக்கையை பொருளாளர் முஹம்மத் சமர்ப்பித்தார். பின்னர், AAF சேவை - செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய தகவலை செயலாளர் நஜ்முதீன் எடுத்துரைத்தார்.

கூட்டத்தில், லாஸ் ஏஞ்சலஸ் பகுதி AAF பொறுப்பாளர் டாக்டர் ராசிக் கலந்துகொண்டு, அண்மையில் புதிதாக தொடங்கி இருக்கும் அதிரை மேம்பாட்டு சங்கமம் பற்றியும், அதன் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.

இந்த கூட்டத்தில், வடக்கு கலிபோர்னியா வாழ் அதிரை பிரமுகர்கள் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.