.

Pages

Sunday, April 1, 2018

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின் மும்பையின் தீவுக்கு மின்சாரம் !

அதிரை நியூஸ்: ஏப் 01
இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின் மும்பையின் தீவுக்கு மின்சாரம் வந்தது

மும்பை மாநகரம் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் (Financial Capital) என்ற சிறப்புப் பெயர் பெற்றது. இங்கிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலுள்ளது தான் 'எலிபெண்டா தீவு' (Elephanta Island) இதன் இன்னொரு பெயர் 'காரபூரி' (Gharapuri) அதாவது குகைகளின் நகரம் (City of Caves) என்ற சிறப்புப் பெயர்.

1. யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தால் பாரம்பரிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

2. சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட அதாவது ஐந்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட 7 குகைக் கோயில்களை கொண்டது.

3. பகலில் சுற்றுலாவாசிகளால் நிரம்பி வழிவது ஆனாலும்.....

இரவு வேளைகளில் இத்தீவிலிருந்து மும்பை மாநகரை பார்த்தால் மின்விளக்குகளால் ஜொலிப்பதை கண்டு ஏங்கவே முடியும், ஏன் இந்தக் கண்ணுக்கு முன் கண்ணாமூச்சி!

4. இந்திய சுதந்திரம் பெற்ற கடந்த 70 ஆண்டுகளாகவே மும்பைக்கு மிக மிக அருகிலுள்ள இந்தத் தீவுக்கு மின்சாரம் கிடையாது!

5. 1980களின் இறுதிவரை இந்தத்தீவிற்கு ஒளி வழங்கியது மண்ணெண்ணெய் விளக்குகளும், மெழுகுவர்த்திகளுமே.

6. அதன் பின்பே டீசல் எஞ்சின் ஜெனரேட்டர் மின்சாரம் மூலம் தினமும் மாலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை 3 மணிநேரத்திற்கு மின்சாரத்தை கண்ணில் காட்டியுள்ளனர்.

7. தற்போது தான் மும்பையிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்திலுள்ள இந்தத் தீவிற்கு கேபிள் அமைத்து, அதிலும் 7 கி.மீ தூரத்திற்கு கடல் அடியில் கேபிள் அமைத்து 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கத் துவங்கியுள்ளனர். இதற்கான செலவு சுமார் 25 கோடி இந்திய ரூபாய்கள்.

8. இந்தத் தீவில் சுமார் 1,200 பேர் வசிக்கின்றனர் ஆனால் இவர்களை விட குரங்குகளின் எண்ணிக்கை அதிகம்.

9. இங்கு கார்களே கிடையாது ஆனால் பூங்காக்களில் பயன்படுத்தப்படும் சிறிய ரயில் தீவை சுற்றி வருகிறது.

10. இங்கு மருத்துவமனையே கிடையாது அதனால் அவசர காலத்திற்கு மும்பைக்கே கடல்வழியாக படகில் வரவேண்டும் என்றாலும் மாலை 5.30 மணிக்கு மேல் படகு சேவை கிடையாது.

11. இருப்பது ஒரேயொரு பள்ளிக்கூடம் அதிலும் 16 வயதுக்குட்பட்டோர் வரை மட்டுமே படிக்க முடியும்.

12. மின்சாரம் இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகள் இங்கு இரவில் தங்குவதில்லை. மின்சார வரவு இந்த நிலையை மாற்றும் எனவும்,

13. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் இரவு தங்கும் சூழலால் தங்களின் வருமானம் உயரும் என எதிர்பார்க்கின்றனர் இத்தீவு மக்கள்.

14. பொருளாதார பின்னனியில் சுற்றுலாவாசிகளுக்கான விடுதிகளும், வீடுகளும் கட்டப்படவுள்ள நிலையில், இங்கு வங்கி ஒன்றையும் ஏடிஎம் மெஷின் ஒன்றையும் நிறுவ வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.

15. பெரும்பாலோர் வாரம் ஒருமுறை மும்பைக்கு படகில் சென்று ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்களை வாங்கி வருகின்றனர்.

16. மின்சாரத்தால் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றங்களை நாங்கள் அச்சத்துடனே வரவேற்கிறோம் என்கிறார் ஒரு தீவுவாசி, இன்னொரு பெண் ஒருவரோ இனி நான் நள்ளிரவு வரை டிவி பார்ப்பேன் என தெரிவித்தார், தேவையான அச்சம் தான்.

17. இன்னும் எத்தனையோ ஆயிரம் கிராமங்கள் இன்னும் இருளில் தான் உள்ளன. அவற்றின் மின்சாரக் கனவுகள் எப்போது நிஜமாகும்?

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.