.

Pages

Sunday, April 1, 2018

சவுதியில் ரமலானில் 2 புனிதப் பள்ளிகளிலும் இஃதிகாப் இருக்கும் யாத்ரீகர்களுக்கு தனியிட ஒதுக்கீடு!

அதிரை நியூஸ்: ஏப்.01
சவுதியில் ரமலானில் 2 புனிதப் பள்ளிகளிலும் இஃதிகாப் இருக்கும் யாத்ரீகர்களுக்கு தனியிட ஒதுக்கீடு செய்யப்பட்டது

புனித ரமலானின் கடைசி 10 இரவுகளில் 24 மணிநேரமும் மஸ்ஜிதுகளிலேயே தங்கியிருந்து வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவது அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களால் மிகவும் ஆர்வமூட்டப்பட்டதொரு சுன்னாவாகும். இஃதிகாப் (Itikaf) என அழைக்கப்படும் இந்த சிறப்பு வணக்க வழிபாட்டை உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் அந்தந்த பகுதியிலுள்ள மஸ்ஜிதுகளில் நிறைவேற்றி வருவது போல் மக்கா மற்றும் மதினா ஆகியவற்றிலுள்ள 2 புனிதப்பள்ளிகளிலும் ஏராளமான யாத்ரீகர்கள் இஃதிகாப் இருப்பர்.

மேற்காணும் 2 புனிதப்பள்ளிகளிலும் இஃதிகாபை நிறைவேற்றுவதற்காக தங்கும் உம்ரா யாத்ரீகர்களால் (இஃதிகாப் இருப்போர் முத்தகீஃப் என அழைக்கப்படுவர் (Mu’takif those observing Itiqaf) பிற தொழுகையாளிகள் தொழுவதற்கும், அவர்கள் கொண்டு வரும் படுக்கை விரிப்புக்கள் போன்றவைகள் ஆங்காங்கே போட்டு வைப்பதாலும், பள்ளியினுள் சிலர் உறங்குவதாலும் இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஹஜ் அமைச்சகத்திடம் முன் வைக்கப்பட்டது ஏற்றுக் கொள்ளப்பட்டு மாற்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் மே மாதம் மத்தியில் துவங்கவுள்ள புனித ரமலான் மாதம் முதல் புனித மதினமா நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுந்நபவி பள்ளியின் மேல்மாடியில் இதற்கான சிறப்பு வசதிகள் செய்யப்படுவதால் சுமார் 10,000 பேர் ஒரே நேரத்தில் இஃதிகாப் இருக்கலாம் அதேவேளை கீழ் பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டுள்ள தொழுகையாளிகளுக்கும் எத்தகைய வசதி குறைவுகளும் ஏற்படாது. பள்ளியினுள் இஃதிகாப் இருக்கவும் அனுமதி கிடையாது.

அதேபோல் புனிதமிகு மக்காவிலுள்ள புனித கஃபாவில் இஃதிகாப் இருக்க விரும்பும் முத்தகீஃப்களுக்கு புதிதாக விஸ்தரிக்கப்பட்ட கிங் பஹத் விரிவாக்கப் பகுதியின் கீழ்தள (Basement) பகுதியில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்விரு புனிதப் பள்ளிகளிலும் இஃதிகாப் இருக்க விரும்புவோர்கள் முன்பதிவு செய்திட ஏதுவாக ஆன்லைன் முன்பதிவு தளம் ஒன்றையும்தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது இரு புனிதப்பள்ளிகளுக்கான தலைமை நிர்வாகம் (The Presidency for the Affairs of the Two Holy Mosques).

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.