பேராவூரணி ஏப்.01-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாக சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பேராவூரணியில் ஞாயிறு அன்று பகல் 1 மணியளவில் இரு இடங்களில் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அண்ணாசிலை அருகில் திமுக முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் என்.செல்வராஜ் தலைமையில், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், திமுக சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் வி.ரவிச்சந்திரன், அவைத்தலைவர் நீலகண்டன், பெருமகளூர் பேரூர் கழக பொறுப்பாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், இளைஞர் அணி ஆரோ.அருள், இள.அரசு, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் முகமது பாரூக், தங்கப்பன் உள்ளிட்ட 60 பேரும், பெரியார் சிலை அருகில் முன்னாள் ஒன்றியச்செயலாளர் சுப.சேகர் தலைமையில், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச்செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், தலைமைக்கழக பேச்சாளர் அப்துல் மஜீத், திமுக இலக்கிய அணி செயலாளர் ஆனந்தராஜ், சென்னை போட்டோஸ் செல்வம், திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் வை.சிதம்பரம், சோம.நீலகண்டன், குழ.அரங்கசாமி, கதிர்வேல் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட திக, திமுக நிர்வாகிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும்" என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். சாலைமறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரை காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாக சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பேராவூரணியில் ஞாயிறு அன்று பகல் 1 மணியளவில் இரு இடங்களில் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அண்ணாசிலை அருகில் திமுக முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் என்.செல்வராஜ் தலைமையில், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், திமுக சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் வி.ரவிச்சந்திரன், அவைத்தலைவர் நீலகண்டன், பெருமகளூர் பேரூர் கழக பொறுப்பாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், இளைஞர் அணி ஆரோ.அருள், இள.அரசு, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் முகமது பாரூக், தங்கப்பன் உள்ளிட்ட 60 பேரும், பெரியார் சிலை அருகில் முன்னாள் ஒன்றியச்செயலாளர் சுப.சேகர் தலைமையில், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச்செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், தலைமைக்கழக பேச்சாளர் அப்துல் மஜீத், திமுக இலக்கிய அணி செயலாளர் ஆனந்தராஜ், சென்னை போட்டோஸ் செல்வம், திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் வை.சிதம்பரம், சோம.நீலகண்டன், குழ.அரங்கசாமி, கதிர்வேல் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட திக, திமுக நிர்வாகிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும்" என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். சாலைமறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரை காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.