.

Pages

Monday, April 2, 2018

குவைத்திலிருந்து அனுப்பும் பணத்தின் மீது வரி விதிப்பு சட்டம் குவைத் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

அதிரை நியூஸ்: ஏப்.02
குவைத்திலிருந்து வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு அனுப்பும் பணத்தின் மீது வரிவிதிக்கக் கூறப்பட்ட யோசனையை குவைத் மத்திய வங்கி எதிர்த்தது என்றாலும் அந்த எதிர்ப்பு புறந்தள்ளப்பட்டு, வரிவிதிக்கத் தகுந்த ஆலோசணை வழங்க பாராளுமன்ற உறுப்பினர் சாலேஹ் அஷ்ஷோர் என்பவர் தலைமையில் ஒரு ஆலோசணை குழு அமைக்கப்பட்டு, அக்குழு தனது அறிக்கையை குவைத் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

அறிக்கையின் மீது விவாதம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் 3ல் 2 பங்கு என்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் அது வரைவுச் சட்டமாக நிறைவேறியது. இப்புதிய வரைவு சட்டத்திற்கு மன்னர் ஒப்புதல் அளித்தவுடன் நடைமுறைப்படுத்தப்படும்.

சட்டம் நடைமுறைக்கு வரும் போது, 99 குவைத் தினார் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு 1% வரியும், 100 முதல் 200 தினார் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு 2% வரியும், 300 முதல் 499 தினார் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு 3% வரியும், 500 முதல் 1,664 தினார் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு 5% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் குவைத்திலிருந்து வருடத்திற்கு சராசரியாக 19 பில்லியன் தினார்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதிலிருந்து குவைத் அரசுக்கு வரி வருவாயாக சுமார் 70 மில்லியன் தினார்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.