.

Pages

Monday, April 2, 2018

அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம் - சாலைமறியல் (படங்கள்)

பேராவூரணி ஏப்.02-
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை அமைத்திட வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பேராவூரணி பெரியார் சிலை அருகில் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் நடைபெற்றது.

அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பேரூராட்சி முன்னாள் தலைவர் என்.அசோக்குமார் (திமுக) தலைமை வகித்தார். திமுக முன்னாள் மாவட்ட  துணைச்செயலாளர் என்.செல்வராஜ், ஒன்றியப் பொறுப்பாளர் க.அன்பழகன், முன்னாள் ஒன்றியச்செயலாளர் சுப.சேகர், நகரச்செயலாளர் தனம் கோ.நீலகண்டன், சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மு.கி.முத்துமாணிக்கம், தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் வி.ரவிச்சந்திரன், இளைஞர் அணி ஆரோ.அருள், மாநில மீனவரணி துணைச்செயலாளர் ஜெயப்பிரகாஷ், திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் வை.சிதம்பரம், நிர்வாகிகள் நீலகண்டன், சந்திரமோகன், விடுதலை சிறுத்தைகள் தொகுதிச் செயலாளர் அரவிந்தகுமார், நகரச்செயலாளர் மைதீன், நிர்வாகிகள் பொன்னிவளவன், ராமமூர்த்தி, காங்கிரஸ் நிர்வாகிகள் கே.வி.கிருஷ்ணன், ராஜசேகர், சம்பத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணைச்செயலாளர் வி.ராஜமாணிக்கம், நகரச்செயலாளர் சித்திரவேல், மதிமுக நகரச்செயலாளர் குமார், நிர்வாகிகள் சாஞ்சி ரவிச்சந்திரன், மணிவாசகம், கொன்றை கர்ணன், கண்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர். பின்னர் தனியார் மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்ட அனைத்து கட்சியினரும், நியூட்ரினோ திட்டத்திற்காக தீக்குளித்து மாண்ட ரவிச்சந்திரனுக்கு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.