.

Pages

Monday, April 16, 2018

துபையில் பன்முக பயனுடைய 'டிஜிட்டல் நம்பர் பிளேட்' விரைவில் அறிமுகம்!

அதிரை நியூஸ்: ஏப்.16
துபையில் விரைவில் பன்முகப் பயன்கள் கொண்ட டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகளை அறிமுகம் செய்யவுள்ளது துபை போக்குவரத்துத் துறை (RTA). தற்போது சில வாகனங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் பொருத்தப்படுகிறது. இந்த சோதனை எதிர்வரும் மே மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது, இச்சோதனைகள் வெற்றிபெரும்பட்சத்தில் அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்படும்.

மேற்கூறப்பட்ட மே முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் தான் அமீரகத்தில் மிக மிக அதிக வெப்பம் நிலவும் காலமென்பதால் இந்த காலகட்டத்தில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்று கண்டறிவதே தற்போதைய சோதனையின் முக்கிய நோக்கம். இந்தத் திட்டத்திற்கு "Tag 2 Connect" என பெயரிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் நம்பர் பிளேட்டின் சில பயன்கள்:
1. சம்பந்தப்பட்ட வாகனம் விபத்தை சந்தித்தால் உடனடியாக அவசரகால உதவி மையங்களுக்கு தானியங்கி தகவல் தெரிவிக்கும்.

2. வாகனம் காணாமல் போனால் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகளில் 'இது திருடப்பட்டது' (Stolen) என்ற தகவல் பளிச்சிடும்.

3. செல்லும் வழியில் ஏதும் விபத்து நிகழ்ந்திருந்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அல்லது சாலை மூடப்பட்டு மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய தகவல்களையும் வாகன ஓட்டுனர்களுக்கு தெரிவிக்கும்.

4. போக்குவரத்து அபராதங்கள், பார்க்கிங் அபராதங்கள், பதிவுக்கட்டணம் போன்ற தகவல்களையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் வேலட்டிற்கு தெரிவிக்கும்.

5.  டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகளின் நம்பர் மற்றும் டிசைன் போன்றவற்றை துபை போக்குவரத்துத் துறையின் இணையதளம் அல்லது ஆப் (Smart App) வழியாகவே மாற்றிக் கொள்ள இயலும்.

6. ஒரு புதிய டிரைவர் அல்லது கற்றுக் கொண்டிருக்கும் ஒரு வாகன ஓட்டுனர் வாகனத்தை இயக்கும் போது அதுகுறித்த சின்னங்களை டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் தெரிவிக்கும்.

Sources:  CarAdvice.com.au / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.