.

Pages

Sunday, April 15, 2018

காஷ்மீர் சிறுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீதி கேட்டு அதிராம்பட்டினத்தில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.15
காஷ்மீரில் ஆஷிஃபா என்ற 8 வயது சிறுமியை கோவில் கருவரைக்குள் அடைத்து வைத்து கற்பழித்து, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக்கொடூர குற்றத்திற்கு நீதி வேண்டியும், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமை வகித்தார். தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, தமுமுக மாவட்டச் செயலர் ஏ.சேக் மைதீன், மமக மாவட்டச் செயலாளர் தஞ்சை நூர் முகமது, மமக முன்னாள் மாவட்டச் செயலர் எம்.ஜபருல்லாஹ், தமுமுக/மமக பொருளாளர் இன்ஜினியர் ஏ.முகமது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநிலப் பேச்சாளர் ஊட்டி அபுதாஹிர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

மாநில ஊடகப் பிரிவு துணைச்செயலாளர் மதுக்கூர் ஃபவாஸ்கான், மமக முன்னாள் மாவட்டச் செயலர் மதுக்கூர் எம். கஃபார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆர்பாட்ட முடிவில், தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலர் எம்.ஆர் கமாலுதீன் நன்றி கூறினார்.

இந்த ஆர்பாட்டத்தில், தமுமுக, மமக மற்றும் ஆதரவாளர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு காஷ்மீரில் ஆஷிஃபா என்ற 8 வயது சிறுமியை கோவில் கருவரைக்குள் அடைத்து வைத்து கற்பழித்து, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக்கொடூர குற்றத்திற்கு நீதி வேண்டியும் முழக்கமிட்டனர்.

முன்னதாக, அதிராம்பட்டினம் பேரூர் தமுமுக, மமக கடைத்தெரு அலுவலகத்தில் இருந்து கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக புறப்பட்டு ஆர்பாட்டம் நடைபெறும் பேருந்து நிலையம் சென்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.