உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாத மத்திய அரசைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை சார்பில், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, நாம் தமிழர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பழ.சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராவண பிரபு, மாவட்ட பொருளாளர் ஏ.ஜே ஜியாவுதீன், பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர் (ஓய்வு) இராசேந்திரன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்துகொண்டு, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.