.

Pages

Sunday, July 1, 2018

அரசுப் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம், ஊக்கத்தொகை பரிசு வழங்கும் விழா!

தஞ்சாவூர் ஜூலை.01-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே  அரசுப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு தங்கநாணயம் வழங்கும் விழாவில் 28 நபர்களுக்கு தங்க நாணயம் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடப்பு ஆண்டு அரசுப்பள்ளியில் சேர்ந்த மாணவ,  மாணவியர்களுக்கு தங்கநாணயம், ஊக்கத்தொகை, மற்றும் இலவச பள்ளிச்சீருடை வழங்கும் விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அண்ணா பரமசிவம் வரவேற்றார். பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் கே.பாண்டியன் முன்னிலை வகித்துப் பேசினார்.
இவ்விழாவில் பேராவூரணி எம்.எல்.ஏ மா.கோவிந்தராசு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

அரசுப்பள்ளியில் பள்ளி மாணவர்களை சேர்க்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என ஊக்கப்படுத்தும் வகையில் அப்பகுதியை சேர்ந்த துலுக்கவிடுதி வடக்கு பள்ளி வளர்ச்சிக்கரங்கள் மற்றும் நேரு நற்பணி மன்ற முன்னாள், இன்னாள் இளைஞர்கள் இணைந்து தங்கநாணயம் வழங்கினர். மொத்தம் 28 நபர்களுக்கு தலா ஒரு கிராம் தங்கநாணயம் மற்றும் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் மூலம் தலா ஆயிரம் ரூபாயும்  வழங்கப்பட்டது. 57  நபர்களுக்கு பார்த்தசாரதி என்பவர் நன்கொடையாக தந்த  இலவச பள்ளிச்சீருடையும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பிரகலாதன், ராமையன், ராமநாதன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வேலு, ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.கணேசன், கோவி.இளங்கோ, கொன்றை கணேசன், கவிஞர் கே.கான்முகமது, பள்ளி மேலாண்மை குழு தலைவி ச.ஆனந்தி, பள்ளி வளர்ச்சி குழு தலைவர் எஸ்.செல்வராசு, துணைத்தலைவர் பி.மாரிமுத்து, பெ.ஆ.கழக துணைத்தலைவர் ரெ.துரைமாணிக்கம், அன்னையர் குழு தலைவி ஏ.மகேஸ்வரி மற்றும் பொதுமக்கள், கிராமத்தினர்  மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி தலைமையாசிரியை வாசுகி நன்றி கூறினார். 

கிராம மக்கள் சார்பில், 'பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பள்ளிக்கு பாதுகாப்பாக சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.