.

Pages

Sunday, July 1, 2018

அமீரகத்தில் அந்நியர்களை அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் 5 லட்சம் திர்ஹம் அபராதம்!

அதிரை நியூஸ்: ஜூலை 01
அமீரக பெடரல் சைபர் கிரைம் சட்டம் எண். 5 / 2012 இல் குறிப்பிட்டுள்ளபடி, அமீரகத்தில் வாழ்பவர்கள் (ரெஸிடென்ட்ஸ்) எவராவாது அடுத்தவர்களின் அந்தரங்க உரிமைகள் பாதிக்கும் வகையில் நடந்து கொண்டால் குறைந்தது 150,000 முதல் 500,000 திர்ஹம் வரை அபராதம் கட்ட நேரிடுவதுடன் 1 வருடம் சிறை தண்டனையையும் அனுபவிக்க நேரிடும் எனக் கூறுகிறது.

மேற்காணும் சட்டப்படி கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக துபை போலீஸ் அறிவித்துள்ளது, ஏன் இந்த கைது? அவர் செய்த குற்றமென்ன?

துபை போக்குவரத்து துறையின் (RTA) தலைமை வாடிக்கையாளர் மையத்திற்கு (Customer happiness center head quarters) வருகை தந்த ஒருவர் அங்கு அழுது கொண்டிருந்த ஒருவரை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்தார். அவர் நினைத்தது போலவே லைக்ஸ் & ஷேர்களை அள்ளினார் ஆனால் தவறான தகவலை பரப்பியதற்காக போலீஸார் அவரை அள்ளிக் கொண்டு சென்றனர்.

Cars Taxi எனப்படும் தனியார் டேக்ஸி நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றும் ஒருவருக்கு 20,000 திர்ஹம் அபராதம் வந்துள்ளது. இந்த அபராதம் ஏன்? எதற்காக? எப்படி? என விசாரிக்க அந்த டிரைவரின் உறவினர் துபை போக்குவரத்து துறையின் தலைமை வாடிக்கையாளர் மையத்திற்கு வந்துள்ளார். வந்தவர் கார்ஸ் டேக்ஸியின் ஊழியர் அல்ல ஆனால் வீடியோ எடுத்தவர் கார்ஸ் டேக்ஸியின் டிரைவர் தன் மீது விதிக்கப்பட்ட அபராதத்திற்காக அழுகிறார் என பதிவு போட்டுள்ளார். 20,000 திர்ஹம் அந்த டிரைவரின் மீது எப்படி வந்தது என்பது குறித்த விசாரணையை தற்போது நிழுவையில் உள்ளதாக துபை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

விளைவு, நிழுவையில் ஒரு விசாரணை குறித்து தவறான தகவல் பரப்பியதாக துபை போக்குவரத்து துறை துபை போலீஸாரிடம் புகார் தெரிவிக்க தவறான தகவலை பரப்பியது மற்றும் (அழுத) அந்நபரின் அனுமதியின்றி வீடியோ எடுத்தது ஆகிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சம்பந்தப்பட்ட வீடியோ பதிவாளர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.