.

Pages

Sunday, July 1, 2018

எமிரேட்ஸ் விமானங்களில் கேபின் பேக்கேஜ்களுக்கு புதிய கட்டுப்பாடு!

அதிரை நியூஸ்: ஜூலை 01
குறிப்பிட்ட சில நாடுகளுக்கு செல்லும் எமிரேட்ஸ் விமானங்களில் கேபின் பேக்கேஜ்களுக்கு புதிய கட்டுப்பாடு

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து அல்லது அதன் வழியாக வரும் அல்லது போகும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்களில் கேபின் பேக்கேஜ் எனப்படும் கை பைகளில் குறிப்பிட்ட சில பொருட்களை கொண்டு செல்ல புதிய கட்டுப்பாடுகள் பாதுகாப்பு காரணங்களை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டுள்ளன.

எமிரேட்ஸ் விமானங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் இதே தடத்தில் பறக்கும் பிற விமானச் சேவைகளுக்கும் பொருந்தும். இப்புதிய உத்தரவுகள் கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் அமெரிக்கா அரசு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து இங்கும் அமுலுக்கு வந்துள்ளது.
தூள் வடிவ பொருட்கள்:

350 மில்லி லிட்டர் அல்லது மில்லி கிராமிற்கு மேற்பட்ட மாவு, காபித்தூள், நறுமணம் மற்றும் மசாலா பொருட்கள், காஸ்மெட்டிக் பொருட்கள் மற்றும் பாலுணவு பொருட்கள் போன்ற தூள் நிலையில் உள்ள பொருட்களை கேபின் பேக்கேஜில் வைத்து கொண்டு செல்ல தடைவிதிக்கப்படுகிறது. செக்கின் பேக்கேஜ் (Check-In) எனப்படும் பயணப் பொதியினுள் வைத்து கொண்டு செல்ல தடையில்லை.

துபை, மிலன் (இத்தாலி), ஏதென்ஸ் (கிரீஸ்) போன்ற சர்வதேச விமான நிலையங்களிலும் இப்பொருட்கள் கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு குப்பையில் வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பால் பவுடர், தூள் வடிவில் உள்ள மருந்துகள் மற்றும் மனித சாம்பல் (அஸ்தி) ஆகியவை இச்சட்டத்திலிருந்து விளக்களிக்கப்பட்டுள்ளது. டூட்டி ப்ரீ ஷாப்புகளில் வாங்கப்படும் தூள் வடிவிலான பொருட்கள் ஏதுமிருந்தால் அவை டூட்டி ப்ரீ கடைகளில் வாங்கப்பட்டதற்கான அத்தாட்சியுடன் மூடிமுத்திரையிடப்பட்ட பைகளில் மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஜனவரி முதற்கொண்டே 'ஸ்மார்ட் பேக்ஸ்' எனப்பாடும் பைகளை அமெரிக்க விமான நிலையங்களில் அனுமதிப்பதில்லை ஆனால் அவற்றிலுள்ள 'லித்தியம் பேட்டரிகளை' அகற்றினால் மட்டுமே கொண்டு செல்ல அனுமதியுண்டு. மிகச்சிறிய அளவிலுள்ள ஸ்மார்ட் பேக்குகளை பேட்டரிகள் அணைத்து வைக்கப்பட்ட நிலையில் கொண்டு செல்லலாம்.

இங்கிலாந்து அரசு குழந்தைகளுக்கான பால் பவுடர், பசும் பால், குழந்தைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி தண்ணீர், சோயா பால் மற்றும் குழந்தைகளின் இதர வகை உணவுகளையும் கொண்டு செல்ல அனுமதிக்கின்றது ஆனால் குழந்தையும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிபந்தனை உண்டு.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.