.

Pages

Thursday, November 15, 2018

கேரளாவில் 4-வது புதிய சர்வதேச விமான நிலையம் ~ டிச.9 ம் தேதி முதல் அபுதாபிக்கு நேரடிச்சேவை!

அதிரை நியூஸ்: நவ.15
டிச. 9 முதல் கேரளாவின் 4வது புதிய விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு விமான சேவை துவங்குகின்றது

எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தின் 4-வது சர்வதேச விமான நிலையமாக திறக்கப்பட்டுள்ள கன்னூர் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது முதலாவது சேவையை அபுதாபிக்கு ஆரம்பம் செய்கின்றது.

ஆரம்பமாக வாரத்தில் 3 நாட்களுக்கு அதாவது செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கன்னூரிலிருந்து அபுதாபிக்கு சேவை வழங்கப்படும். கன்னூரிலிருந்து இந்திய நேரம் காலை 7 மணிக்கு புறப்படும் விமானம் அபுதாபி நேரம் பகல் 12.30 மணிக்கு வந்து சேரும். மீண்டும் அபதாபியிலிருந்து பகல் 1.30 மணியளவில் புறப்பட்டு இந்திய நேரம் இரவு 7 மணிக்கு கன்னூர் விமான நிலையத்தை சென்றடையும்.

நேற்று செவ்வாய்கிழமை இத்தடத்திற்கான முன்பதிவுகள் துவங்கிய உடனேயே கிட்டதட்ட அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டன என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவையின் நேரங்கள் விரைவில் மாற்றப்படவுள்ளதுடன் ஆரம்பமாக அபுதாபி, தோஹா மற்றும் ரியாத் ஆகிய நகரங்களுக்கு கன்னூரிலிருந்து விமானச் சேவைகள் துவங்கவுள்ளன, பின்பு படிப்படியாக அமீரகத்தின் இதர விமான நிலையங்கள் உள்ளிட்ட பல சர்வதேச நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.