அதிரை நியூஸ்: நவ.29
டெல்லியிலிருந்து சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் அர்லண்டா விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் பயணிகளை இறக்குவதற்காக டேக்ஸிவேயில் சென்று கொண்டிருந்த போது அதன் இறக்கைகளில் ஒன்று விமான நிலைய கட்டிடம் ஒன்றின் மீது மோதி சேதமடைந்தது.
இந்த விமானத்தில் இருந்த 179 பயணிகளும் விமான ஊழியர்களும் எத்தகைய காயங்களுமின்றி நகரும் படிக்கட்டு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தினை தொடர்ந்து ஸ்டாக்ஹோமிலிருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன் கடந்த அக்டோபர் மாதம் திருச்சியிலிலிருந்து துபைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று அங்கிருந்த கண்காணிப்பு கோபுரம் மற்றும் விமான நிலைய சுற்றுச்சுவர்களின் மீது மோதியதில் பலத்த சேதமடைந்த நிலையிலேயே பறந்து சென்ற விமானம் திரும்ப அழைக்கப்பட்டு மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டது.
அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் மாலத்தீவு நாட்டின் மாலி விமான நிலையத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பூர்த்தியாகாத புதிய விமான ஓடுதளத்தில் தவறுதலாக தரையிறங்கியது எனினும் இந்த அனைத்து சம்பவங்களிலும் இறையருளால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதே மிகவும் ஆறுதலளிக்கும் செய்தியாகும்.
Source: the news minute
தமிழில்: நம்ம ஊரான்
டெல்லியிலிருந்து சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் அர்லண்டா விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் பயணிகளை இறக்குவதற்காக டேக்ஸிவேயில் சென்று கொண்டிருந்த போது அதன் இறக்கைகளில் ஒன்று விமான நிலைய கட்டிடம் ஒன்றின் மீது மோதி சேதமடைந்தது.
இந்த விமானத்தில் இருந்த 179 பயணிகளும் விமான ஊழியர்களும் எத்தகைய காயங்களுமின்றி நகரும் படிக்கட்டு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தினை தொடர்ந்து ஸ்டாக்ஹோமிலிருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன் கடந்த அக்டோபர் மாதம் திருச்சியிலிலிருந்து துபைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று அங்கிருந்த கண்காணிப்பு கோபுரம் மற்றும் விமான நிலைய சுற்றுச்சுவர்களின் மீது மோதியதில் பலத்த சேதமடைந்த நிலையிலேயே பறந்து சென்ற விமானம் திரும்ப அழைக்கப்பட்டு மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டது.
அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் மாலத்தீவு நாட்டின் மாலி விமான நிலையத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பூர்த்தியாகாத புதிய விமான ஓடுதளத்தில் தவறுதலாக தரையிறங்கியது எனினும் இந்த அனைத்து சம்பவங்களிலும் இறையருளால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதே மிகவும் ஆறுதலளிக்கும் செய்தியாகும்.
Source: the news minute
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.