அதிரை நியூஸ்: நவ.15
ரோஹிங்கிய இன அழிப்பிற்காக ஆங் சாங் சூகீக்கு வழங்கப்பட்ட உயரிய விருதை பிடுங்கியது சர்வதேச பொதுமன்னிப்பு சபை
இங்கிலாந்திலிருந்து செயல்படும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் எனும் சர்வதேச பொது மன்னிப்பு சபை (Amnesty International) மியான்மர் நாட்டில் ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு எதிராக அரசு மற்றும் ராணுவத்தின் ஆதரவுடன் நடைபெறும் இனசுத்திகரிப்பு வன்முறைகளுக்கு எதிராக சிறுதுரும்பையும் நகர்த்தாத அதன் ஆட்சியாளர் ஆங் சாங் சூகீக்கு (Aung San Suu Kyi) கடந்த 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'மனசாட்சியின் தூதுவர்' (The Ambassador of Conscience Award) என்ற விருதை மீண்டும் திரும்பப் பெற்றது.
மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் கூட்டுக் கற்பழிப்புகள், கொலைகள், வன்தாக்குதல்கள், சுட்டுக் கொல்லுதல் போன்ற பல பயங்கரவாதங்களை நிகழ்த்திய ராணுவம் ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் சுமார் 720,000 பேர் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இன்று வரை (உண்மையான கணக்கு இதைவிட பலமடங்கு இருக்கும்) நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை இன அழிப்பு என (Act of Genocide) அடையாளப்படுத்தியுள்ளது ஆனால் இதை ஒரு பொருட்டாகவே ஆங் சாங் சூகீ கருதவில்லை, குற்றவாளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆங் சாங் சூகீயின் ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு எதிரான வன்நடவடிக்கைகளின் காரணத்தினால் 'உங்களை ஒரு நம்பிக்கையின் அடையாளமாக, தைரியமானவராக, மனித உரிமைகளின் பாதுகாவலராக கருத முடியவில்லை' என கடும் கண்டனங்களை தெரிவித்தும், வழங்கிய விருதை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது சர்வதேச பொது மன்னிப்பு சபை. ஆங் சாங் சூகீக்கு இந்த விருது 2009 ஆம் ஆண்டு அவர் மியான்மார் ராணுவ ஆட்சியை ஜனநாயக வழியில் எதிர்த்தால் 15 ஆண்டுகள் வீட்டுச்சிறையில் இருந்த போது வழங்கப்பட்டது.
"Today, we are profoundly dismayed that you no longer represent a symbol of hope, courage, and the undying defence of human rights," Amnesty International chief Kumi Naidoo said in a letter to Suu Kyi released by the group.
"Amnesty International cannot justify your continued status as a recipient of the Ambassador of Conscience award and so with great sadness we are hereby withdrawing it from you."
ஆங் சாங் சூகீக்கு கனடா நாடு வழங்கியிருந்த கௌரவ குடியுரிமையை கடந்த மாதம் திரும்பப் பெற்றுக் கொண்டதும், உலகளாவிய பல்வேறு பல்கலைகழகங்கள் மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் வழங்கியிருந்த சிறுசிறு விருதுகள் என பல விருதுகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. ஆங் சாங் சூகீக்கு 1991 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதும் அதை சுமக்க தகுதியே இல்லாதவள் என்ற நிலையை விரைவில் அடையட்டும், அவமானங்கள் தொடரட்டும்.
Suu Kyi was stripped of her honourary Canadian citizenship over her failure to speak up for the Rohingyas last month. She has also lost numerous smaller awards from individual universities and local and regional governments.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
ரோஹிங்கிய இன அழிப்பிற்காக ஆங் சாங் சூகீக்கு வழங்கப்பட்ட உயரிய விருதை பிடுங்கியது சர்வதேச பொதுமன்னிப்பு சபை
இங்கிலாந்திலிருந்து செயல்படும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் எனும் சர்வதேச பொது மன்னிப்பு சபை (Amnesty International) மியான்மர் நாட்டில் ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு எதிராக அரசு மற்றும் ராணுவத்தின் ஆதரவுடன் நடைபெறும் இனசுத்திகரிப்பு வன்முறைகளுக்கு எதிராக சிறுதுரும்பையும் நகர்த்தாத அதன் ஆட்சியாளர் ஆங் சாங் சூகீக்கு (Aung San Suu Kyi) கடந்த 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'மனசாட்சியின் தூதுவர்' (The Ambassador of Conscience Award) என்ற விருதை மீண்டும் திரும்பப் பெற்றது.
மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் கூட்டுக் கற்பழிப்புகள், கொலைகள், வன்தாக்குதல்கள், சுட்டுக் கொல்லுதல் போன்ற பல பயங்கரவாதங்களை நிகழ்த்திய ராணுவம் ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் சுமார் 720,000 பேர் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இன்று வரை (உண்மையான கணக்கு இதைவிட பலமடங்கு இருக்கும்) நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை இன அழிப்பு என (Act of Genocide) அடையாளப்படுத்தியுள்ளது ஆனால் இதை ஒரு பொருட்டாகவே ஆங் சாங் சூகீ கருதவில்லை, குற்றவாளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆங் சாங் சூகீயின் ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு எதிரான வன்நடவடிக்கைகளின் காரணத்தினால் 'உங்களை ஒரு நம்பிக்கையின் அடையாளமாக, தைரியமானவராக, மனித உரிமைகளின் பாதுகாவலராக கருத முடியவில்லை' என கடும் கண்டனங்களை தெரிவித்தும், வழங்கிய விருதை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது சர்வதேச பொது மன்னிப்பு சபை. ஆங் சாங் சூகீக்கு இந்த விருது 2009 ஆம் ஆண்டு அவர் மியான்மார் ராணுவ ஆட்சியை ஜனநாயக வழியில் எதிர்த்தால் 15 ஆண்டுகள் வீட்டுச்சிறையில் இருந்த போது வழங்கப்பட்டது.
"Today, we are profoundly dismayed that you no longer represent a symbol of hope, courage, and the undying defence of human rights," Amnesty International chief Kumi Naidoo said in a letter to Suu Kyi released by the group.
"Amnesty International cannot justify your continued status as a recipient of the Ambassador of Conscience award and so with great sadness we are hereby withdrawing it from you."
ஆங் சாங் சூகீக்கு கனடா நாடு வழங்கியிருந்த கௌரவ குடியுரிமையை கடந்த மாதம் திரும்பப் பெற்றுக் கொண்டதும், உலகளாவிய பல்வேறு பல்கலைகழகங்கள் மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் வழங்கியிருந்த சிறுசிறு விருதுகள் என பல விருதுகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. ஆங் சாங் சூகீக்கு 1991 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதும் அதை சுமக்க தகுதியே இல்லாதவள் என்ற நிலையை விரைவில் அடையட்டும், அவமானங்கள் தொடரட்டும்.
Suu Kyi was stripped of her honourary Canadian citizenship over her failure to speak up for the Rohingyas last month. She has also lost numerous smaller awards from individual universities and local and regional governments.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.