.

Pages

Thursday, November 15, 2018

கஜா புயல் ~ அதிராம்பட்டினத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சிறப்பு பார்வையாளர் ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.15
அதிராம்பட்டினம் கடலோரப்பகுதியில் கஜா புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மை செயலாளருமான பிரதீப் யாதவ் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு பணிகளை இன்று வியாழக்கிழமை மேற்கொண்டனர்.

இதில், அதிராம்பட்டினம் மற்றும் ராஜமடம் ஆகிய இடங்களில் உள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அங்கு ஜெனேரட்டர் தயார் நிலையில் உள்ளதையும், ராஜாமடம் கடலோரப் பகுதி பொதுமக்களிடம் பாதுகாப்பான இடங்களில் தங்கும் படியும் அறிவுறுத்தினர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.