.

Pages

Sunday, November 11, 2018

நடுவானில் பசியால் கதறிய குழந்தை: பாலூட்டிய விமான பணிப்பெண்ணின் தாயுள்ளம்!

அதிரை நியூஸ்: நவ.11
நடுவானில் பசியால் கதறிய குழந்தை பாலூட்டிய பிலிப்பைன்ஸ் விமான பணிப்பெண்ணின் தாயுள்ளம்.

கைக்குழந்தையுடன் பிலிப்பைன்ஸ் விமானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு பெண் பயணியின் கைக்குழந்தை பசியால் கதறியது, அதன் தாயோ கொண்டு வந்த புட்டிப்பால் தீர்ந்ததால் கையறுநிலையில் இருந்தார் மேலும் விமானத்திலும் குழந்தைகளுக்கான பாலுணவு ஏதுமில்லை, தாய் ஏன் பாலூட்டவில்லை என்பதற்கான காரணம் சொல்லப்படவில்லை.

குழந்தை பசியால் அழுததை கண்ட 24 வயது விமானப் பணிப்பெண்ணான பட்ரீஷியா ஆர்கானோ என்பவர் மேலும் தாமதிக்காமல் குழந்தையை வாங்கி சமயோசிதமாக தான் பாலூட்டத் துவங்கினார், குழந்தை முழுமையாக பாலருந்தி விட்டு தானாக உறங்கும் வரை பாலூட்டினார். இது அவரது பணிக்கடமைகளில் ஒன்றாக இல்லாவிட்டாலும் ஒரு தாயாக மாறி தனது உணர்வுகளை செயல்படுத்தியதை அடுத்து பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் நிர்வாகம் உள்ளிட்ட பல தரப்பிலும் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.