.

Pages

Wednesday, November 7, 2018

இந்தோனேஷியா விமான பயணிகள் சந்தித்த வித்தியாசமான பிரச்சனை!

அதிரை நியூஸ்: நவ.07
'பழங்களின் அரசன்' (King of Fruits) என வர்ணிக்கப்படும் சிறிய சைஸ் பலா பழங்களைப் போல் காணப்படும் துரியான் (Durian) பழங்கள் கிழக்காசிய நாடுகளில் 2 மிக முக்கிய காரணங்களுக்காக மிகவும் பிரசித்துபெற்றது.

ஒன்று: இளமஞ்சள் நிற வெண்ணெய் போல் அதனுள் இருக்கும் சுளைகளின் அற்புதமான சுவை.

இரண்டு: பழத்திலிருந்து எழும் சகிக்க இயலாத துர்நாற்றம். 

சுமத்ரா மாகாணத்தின் பெங்க்குலூ (Bengkulu) நகர விமான நிலையத்திலிருந்து தலைநகர் ஜகார்த்தாவிற்கு ஸ்ரீவிஜயா ஏர் (Sriwijaya Air) எனும் பயணிகள் விமானம் புறப்படத் தயாரான நிலையில் விமானத்தின் உள்ளிருந்து கிளம்பிய துர்நாற்றத்தை அடுத்து அதிலிருந்த பயணிகள் 'ஒன்னு எங்கள இறக்கிவிடு இல்லே விமானத்தில் ஏற்றப்பட்டுள்ள துரியான் பழங்களை இறக்கு' என போராட்டத்தில் குதித்தனர் இதனால் விமான புறப்பட சுமார் 1 ½ மணிநேரம் தாமதமானது.

விமான நிறுவன ஊழியர்கள் வெயிலாக இருப்பதால் வாடை வருகின்றது, விமானம் பறக்க ஆரம்பித்தவுடன் நாற்றம் காற்றில் கரைந்துவிடும், துரியான் பழங்கள் விமானத்தில் கொண்டு செல்ல தடை செய்யப்பட்ட பொருளல்ல, நாற்றம் பரவாமல் இருக்க ரம்ப இலைகள் (Pandan Leaves) மற்றும் காபி தூள் துவப்பட்டுள்ளன என பல சமாதானங்களை கூறினாலும் பயணிகளிடம் எதுவும் எடுபடவில்லை. இறுதியாக விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த 2 டன் துரியானை பழங்களையும் இறக்கிய பிறகே பயணிகள் சமாதானம் அடைந்துள்ளனர்.

துரியான் பழங்களுடன் பிறந்து, உண்டு, வளர்ந்த மக்களாலேயே இந்தோனேஷிய விமானத்திற்கு இப்படியும் ஒரு சோதனை!

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.