.

Pages

Thursday, November 8, 2018

அதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.08
அமமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம்  வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சேகர் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் சு.பாஸ்கர், ஒன்றியச் செயலாளர் தம்பி ரமேஷ், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஜமால் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், பொதுமக்கள், பயணிகள், வர்த்தகர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அக்கட்சி நிர்வாகிகள் எம்.பி அபூபக்கர், அய்யாவு, ரபீக், முகமது, சிராஜுதீன், இராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.