.

Pages

Friday, November 9, 2018

கூகுள் எர்த் மூலம் கடலுக்குள் மூழ்கிய விமானம் கண்டுபிடிப்பு? (வீடியோ)

அதிரை நியூஸ்: நவ.09
இங்கிலாந்தின் தென் யார்க்ஷையரைச் சேர்ந்த 55 வயது ராபர்ட் மோர்டன் என்பவர் கூகுள் எர்த்தை (Google Earth) ஆராய்ந்து கொண்டிருந்த போது ஒரு ஆச்சரியமான விஷயம் அவரது கழுகு பார்வைக்குப்பட்டது. ஸ்காட்லாந்து நாட்டின் கடல் பகுதியில் எடின்பர்க் (Edinburg) என்ற நகரிலிருந்து 7வது மைலில் கடலுக்குள் ஒரு விமானம் முழுமையாக மூழ்கியிருப்பதை கண்டு ஆச்சரியத்தில் இவரே மூழ்கிப் போனார்.

தொடர்ந்து தகவல்களை இணையத்தில் தேடியதில் எந்த விமானமும் அந்தப்பகுதியில் விழுந்து மூழ்கியதற்கான தகவல் கிடைக்கவில்லை. எனவே, இது கூகுள் எர்த் பூமியை படம்பிடிக்கும் போது மெல்லிய மேகக்கூட்டத்தின் கீழ் பறந்த விமானத்தின் பிம்பம் இப்படி கடலுக்குள் முழ்கியுள்ளது போல் பரிணமித்திருக்க வாய்ப்புள்ளது என்ற கருத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதேபோல் மர்மமாக காணமல் போன மலேஷியன் ஏர்லைன்ஸின் விமானத்தின் சிதைந்த பாகங்களை கம்போடியா நாட்டின் தலைநகர் பினோம்பெங்கிற்கு (Phnom Penh) வடக்கேயுள்ள காட்டுப்பகுதிக்குள் கூகுள் எர்த் மூலம் பார்த்ததாக டேனியல் போயர் என்ற விமானி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ லிங்க்: https://www.msn.com/en-ca/video/watch/google-earth-image-shows-a-plane-apparently-resting-beneath-the-sea/vi-BBPsBgS

Source: Daily Mail
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.