தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் காச நோய் தடுப்பு பிரிவு சார்பில் கிளைச்சிறைகளில் உள்ள கைதிகளுக்கு காசநோய் பரிசோதனை செய்தவற்கான நடமாடும் அதிநவீன காசநோய் பரிசோதனை வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (07.11.2018) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள கிளைச் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு காச நோய் மற்றும் எச்.ஐ.வி.பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையின் காச நோய் தடுப்பு பிரிவு சார்பில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் அதிநவீன நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனத்தில் காச நோயை கண்டறிவதற்கான அதிநவீன கருவிகள் மற்றும் பரிசோதனை உபகரணங்கள் அமைந்துள்ளது. அதிநவீன நடமாடும் காச நோய் பரிசோதனை வாகனத்தில் ஒரு ஆய்வக நுட்பநர் கைதிகளை பரிசோதனை செய்து காச நோய் உள்ளதா என கண்டறிவார் என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
துவக்க நிகழ்ச்சியில் காச நோய் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் டாக்டர் மாதவி, மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் பசுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள கிளைச் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு காச நோய் மற்றும் எச்.ஐ.வி.பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையின் காச நோய் தடுப்பு பிரிவு சார்பில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் அதிநவீன நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனத்தில் காச நோயை கண்டறிவதற்கான அதிநவீன கருவிகள் மற்றும் பரிசோதனை உபகரணங்கள் அமைந்துள்ளது. அதிநவீன நடமாடும் காச நோய் பரிசோதனை வாகனத்தில் ஒரு ஆய்வக நுட்பநர் கைதிகளை பரிசோதனை செய்து காச நோய் உள்ளதா என கண்டறிவார் என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
துவக்க நிகழ்ச்சியில் காச நோய் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் டாக்டர் மாதவி, மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் பசுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.