.

Pages

Sunday, November 11, 2018

அதிரையில் M.M.S இல்ல மணவிழா ~ அரசு உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.11
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் மறைந்த M.M.S பஷீர் அகமது புதல்வர் பொறியாளர் தமீம் அன்சாரி மணமகனுக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மேலத்தெரு M.M.S வாடி வளாகத்தில்  திருமணம் நடைபெற்றது.

விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ராமலிங்கம், சண்முகம், ஞானசேகரன், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார், பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், தமாகா தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளருமாகிய என்.ஆர் ரெங்கராஜன், டிஎஸ்பி கணேஷமூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள், பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் M.M.S குடும்பத்தார் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.

1 comment:

  1. மணமக்கள் வாழ்க வளத்துடன் பல்லாண்டு

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.