.

Pages

Tuesday, November 6, 2018

குவைத்தில் மழை வெள்ளம் ~ அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை!

அதிரை நியூஸ்: நவ.06
குவைத்தில் கடந்த 2 நாட்களாக வெளுத்துவாங்கும் மழையால் ஊரெங்கும் வெள்ளப்  பெருக்கெடுத்து ஓடுவதால் குவைத் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், வங்கிகள் என அனைத்திற்கும் பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலையில் தனது விமான போக்குவரத்தை ரத்து செய்வதாக அறிவித்திருந்த குவைத் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனது அறிவிப்பை திரும்பப்பெற்று கொண்டுள்ளதுடன் விமான போக்குவரத்து வழமைபோல் இயங்கும் எனவும் அறிவித்துள்ளது.

குவைத் உள்துறை அமைச்சகம் சார்பில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வது, பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை போக்குவரத்திற்கு மூடி மாற்றுப்பாதையில் பயணிக்கச் செய்வது, வெள்ளநீர் சூழ்ந்துள்ள சுரங்க நடைபாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகளிலிருந்து வெள்ளநீரை அகற்றுவது போன்ற பணிகளை முடிக்கிவிட்டுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.