அதிரை நியூஸ்: நவ.15
உம்ராவிலிருந்து திரும்பிய 4 வயது கேரள சிறுவன் உடல்நலக் குறைவால் நடுவானில் மரணம்
தாய் தந்தையர் உள்ளிட்ட 11 குடும்ப உறுப்பினர்களுடன் உம்ரா செய்துவிட்டு திரும்பிய நிலையில் உடல்நலக் குறைவால் திங்கட்கிழமை மாலை நடுவானில் 4 வயது கேரளச் சிறுவன் யஹ்யா அவர்களின் உயிர் பிரிந்தது, இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
ஓமன் ஏர்வேஸ் விமானத்தில் மஸ்கட் வழியாக காலிகட் விமான நிலையத்திற்கு பறந்து கொண்டிருந்த போது நடவானில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அபுதாபியில் விமானம் மிக அவசரமாக இறக்கப்பட்டது எனினும் அவர் இறந்துவிட்டதாக விமான நிலைய மருத்துவ வட்டாரங்கள் அறிவித்தன.
4 வயது யஹ்யா அவர்கள் பிறவியிலிருந்தே வலிப்பு நோய் பாதிப்பில் இருந்துள்ளார் மேலும் பேசும் திறனற்றும் இருந்துள்ளார் ஆனால் அனைவரையும் ஸ்நேகத்துடன் பார்த்து புன்னகை பூப்பாராம்.
யஹ்யாவுடைய உடலுடன் அவரது தந்தையும் அபுதாபியில் இறங்கிக் கொள்ள மற்ற குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து அதே விமானத்தில் பறந்தனர். இரவோடு இரவாக சிறுவருடைய தூதரகம் சம்பந்தப்பட்ட வேலைகள் மற்றும் சிறுவருடைய ஜனாஸாவை அவரது சொந்த ஊரான கன்னூர் கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மாலையே நல்லடக்கம் செய்யப்பட்டார்.
அன்னாரது பெற்றோர் உற்றோர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை தருவானாக! சிறுவரை ஜன்னத் அல் ஃபிர்தவ்ஸில் நுழையச் செய்வானாக!
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
உம்ராவிலிருந்து திரும்பிய 4 வயது கேரள சிறுவன் உடல்நலக் குறைவால் நடுவானில் மரணம்
தாய் தந்தையர் உள்ளிட்ட 11 குடும்ப உறுப்பினர்களுடன் உம்ரா செய்துவிட்டு திரும்பிய நிலையில் உடல்நலக் குறைவால் திங்கட்கிழமை மாலை நடுவானில் 4 வயது கேரளச் சிறுவன் யஹ்யா அவர்களின் உயிர் பிரிந்தது, இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
ஓமன் ஏர்வேஸ் விமானத்தில் மஸ்கட் வழியாக காலிகட் விமான நிலையத்திற்கு பறந்து கொண்டிருந்த போது நடவானில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அபுதாபியில் விமானம் மிக அவசரமாக இறக்கப்பட்டது எனினும் அவர் இறந்துவிட்டதாக விமான நிலைய மருத்துவ வட்டாரங்கள் அறிவித்தன.
4 வயது யஹ்யா அவர்கள் பிறவியிலிருந்தே வலிப்பு நோய் பாதிப்பில் இருந்துள்ளார் மேலும் பேசும் திறனற்றும் இருந்துள்ளார் ஆனால் அனைவரையும் ஸ்நேகத்துடன் பார்த்து புன்னகை பூப்பாராம்.
யஹ்யாவுடைய உடலுடன் அவரது தந்தையும் அபுதாபியில் இறங்கிக் கொள்ள மற்ற குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து அதே விமானத்தில் பறந்தனர். இரவோடு இரவாக சிறுவருடைய தூதரகம் சம்பந்தப்பட்ட வேலைகள் மற்றும் சிறுவருடைய ஜனாஸாவை அவரது சொந்த ஊரான கன்னூர் கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மாலையே நல்லடக்கம் செய்யப்பட்டார்.
அன்னாரது பெற்றோர் உற்றோர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை தருவானாக! சிறுவரை ஜன்னத் அல் ஃபிர்தவ்ஸில் நுழையச் செய்வானாக!
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.