அதிரை நியூஸ்: நவ.05
அமெரிக்காவின் கன்சாஸ் விமான நிலையத்தில் பயணிகளின் கார்கோ ஏற்றும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் 23 வயது இளைஞர் ஒருவர். இவர் மது அருந்திவிட்டு பணிக்கு சென்றதால் விமானத்தின் கார்கோ ஏற்றும் பகுதியில் தன்னை மறந்து தூங்கிவிட்டார்.
தூங்கிய ஊழியருடன் கன்சாஸ் (Kansas) நகரிலிருந்து புறப்பட்ட விமானம் 2 மணிநேரம் கழித்து சிகாகோ (Chicago) விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அமெரிக்க விமானத்தின் கூத்து இதுவென்றால் இந்திய விமான கூத்தோ அதற்கும் மேலே!
இந்தியாவில் பயணிகளின் கார்கோவையே ஏற்ற மறந்த கோ ஏர் (Go Air) நிறுவனம்
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவிற்கு புறப்பட்ட கோ ஏர் (Go Air) எனும் விமானத்தில் அதன் ஊழியர்கள் பயணிகளின் லக்கேஜ்களை சுத்தமாக ஏற்ற மறந்துள்ளனர் இல்லையில்லை கடும் அலட்சியம் காட்டியுள்ளனர். காஷ்மீர் மாநிலப் பயணிகள் யாரும் தங்களுடைய கேபின் பேக்கேஜ் எனப்படும் கை பேக்குகளை விமானத்தினுள் எடுத்துச் செல்ல தடை உள்ளது என்பதை அறிந்தால் மட்டுமே இதன் பாதிப்பை உணர்ந்து கொள்ள முடியும்.
ஜம்மு சென்ற பயணிகள் தங்களுடைய லக்கேஜ் 1 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்தும் வராததையடுத்து விமான ஊழியர்கள் ஸ்ரீநகரிலிருந்து ஜம்மு வரும் அடுத்த தனியார் விமானத்திலேயே உங்களுடைய பொருட்கள் எடுத்து வரப்படும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் பின்பு சிறிது நேரத்திலேயே உங்களுடைய உடைமைகளை நாளை வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என பெரிய சம்மர்சால்ட் அடித்துள்ளனர்.
இந்த அவல அலட்சிய சேவை குறித்து பத்திரிக்கையாளர்கள் கோ ஏர் விமான நிறுவனத்தை போனில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் எதிர்முனையில் எடுத்து பதில் சொல்ல யாருமில்லை. கோ ஏர் விமான நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் குறிப்பட்டிருந்த ஈமெயில் முகவரிகளுக்கு புகார் அனுப்பியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும் ஜம்மு விமான நிலையத்தில் எக்ஸிகியுடிட் பயணிகளுக்கான பகுதியில் பணியிலிருந்த ஊழியரும் 'பதில் சொல்ல தனக்கு அதிகாரமில்லை' என மறுத்துவிட்டார்.
இதை அலட்சியம் என சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
அமெரிக்காவின் கன்சாஸ் விமான நிலையத்தில் பயணிகளின் கார்கோ ஏற்றும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் 23 வயது இளைஞர் ஒருவர். இவர் மது அருந்திவிட்டு பணிக்கு சென்றதால் விமானத்தின் கார்கோ ஏற்றும் பகுதியில் தன்னை மறந்து தூங்கிவிட்டார்.
தூங்கிய ஊழியருடன் கன்சாஸ் (Kansas) நகரிலிருந்து புறப்பட்ட விமானம் 2 மணிநேரம் கழித்து சிகாகோ (Chicago) விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அமெரிக்க விமானத்தின் கூத்து இதுவென்றால் இந்திய விமான கூத்தோ அதற்கும் மேலே!
இந்தியாவில் பயணிகளின் கார்கோவையே ஏற்ற மறந்த கோ ஏர் (Go Air) நிறுவனம்
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவிற்கு புறப்பட்ட கோ ஏர் (Go Air) எனும் விமானத்தில் அதன் ஊழியர்கள் பயணிகளின் லக்கேஜ்களை சுத்தமாக ஏற்ற மறந்துள்ளனர் இல்லையில்லை கடும் அலட்சியம் காட்டியுள்ளனர். காஷ்மீர் மாநிலப் பயணிகள் யாரும் தங்களுடைய கேபின் பேக்கேஜ் எனப்படும் கை பேக்குகளை விமானத்தினுள் எடுத்துச் செல்ல தடை உள்ளது என்பதை அறிந்தால் மட்டுமே இதன் பாதிப்பை உணர்ந்து கொள்ள முடியும்.
ஜம்மு சென்ற பயணிகள் தங்களுடைய லக்கேஜ் 1 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்தும் வராததையடுத்து விமான ஊழியர்கள் ஸ்ரீநகரிலிருந்து ஜம்மு வரும் அடுத்த தனியார் விமானத்திலேயே உங்களுடைய பொருட்கள் எடுத்து வரப்படும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் பின்பு சிறிது நேரத்திலேயே உங்களுடைய உடைமைகளை நாளை வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என பெரிய சம்மர்சால்ட் அடித்துள்ளனர்.
இந்த அவல அலட்சிய சேவை குறித்து பத்திரிக்கையாளர்கள் கோ ஏர் விமான நிறுவனத்தை போனில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் எதிர்முனையில் எடுத்து பதில் சொல்ல யாருமில்லை. கோ ஏர் விமான நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் குறிப்பட்டிருந்த ஈமெயில் முகவரிகளுக்கு புகார் அனுப்பியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும் ஜம்மு விமான நிலையத்தில் எக்ஸிகியுடிட் பயணிகளுக்கான பகுதியில் பணியிலிருந்த ஊழியரும் 'பதில் சொல்ல தனக்கு அதிகாரமில்லை' என மறுத்துவிட்டார்.
இதை அலட்சியம் என சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.