அதிராம்பட்டினம், நவ.13
அதிராம்பட்டினத்துக்கு காவிரி நீர் வழங்காத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற முன்னாள் சேர்மன் அஸ்லம் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.
டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூலை 19-ம் தேதி மேட்டூர் அணையும், ஜூலை 22-ம் தேதி கல்லணையும் திறக்கப்பட்டது. இந்த இரு அணைகளும் திறக்கப்பட்டு சுமார் 4 மாதங்களாகியுள்ள நிலையில் பல முறை மனுக்கள் அளித்தும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைமடைப் பகுதியான அதிராம்பட்டினம் பகுதிக்கு இதுவரை காவிரி நீர் வரவில்லை. இதனால் தங்கள் ஊரை தொடர்ந்து புறக்கணிக்கணிக்கும் பொதுப்பணித்துறை நிர்வாகத்தைக் கண்டித்து, அதிராம்பட்டினம் கடைமடைப்பகுதி விவசாயிகள், நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், மீனவர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் சார்பில், இன்று (நவ.14) புதன்கிழமை காலை 10 மணியளவில், அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், நாம் தமிழர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.ஜே ஜியாவுதீன் உட்பட அதிரை பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த விவசாயிகள், மீனவர்கள், ஜமாத்தார்கள் உள்ளிட்ட 60 பேர் கைது செய்யப்பட்டு ஏரிப்புறக்கரை இந்திய செஞ்சுலுவைச் சங்க மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
அதிராம்பட்டினத்துக்கு காவிரி நீர் வழங்காத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற முன்னாள் சேர்மன் அஸ்லம் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.
டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூலை 19-ம் தேதி மேட்டூர் அணையும், ஜூலை 22-ம் தேதி கல்லணையும் திறக்கப்பட்டது. இந்த இரு அணைகளும் திறக்கப்பட்டு சுமார் 4 மாதங்களாகியுள்ள நிலையில் பல முறை மனுக்கள் அளித்தும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைமடைப் பகுதியான அதிராம்பட்டினம் பகுதிக்கு இதுவரை காவிரி நீர் வரவில்லை. இதனால் தங்கள் ஊரை தொடர்ந்து புறக்கணிக்கணிக்கும் பொதுப்பணித்துறை நிர்வாகத்தைக் கண்டித்து, அதிராம்பட்டினம் கடைமடைப்பகுதி விவசாயிகள், நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், மீனவர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் சார்பில், இன்று (நவ.14) புதன்கிழமை காலை 10 மணியளவில், அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், நாம் தமிழர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.ஜே ஜியாவுதீன் உட்பட அதிரை பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த விவசாயிகள், மீனவர்கள், ஜமாத்தார்கள் உள்ளிட்ட 60 பேர் கைது செய்யப்பட்டு ஏரிப்புறக்கரை இந்திய செஞ்சுலுவைச் சங்க மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.