அதிராம்பட்டினம், நவ.28
கஜா புயலின் கோரத்தாண்டவம் காரணமாக டெல்டாவின் கடைமடைப் பகுதி அதிராம்பட்டினம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 100 அடி உயர சிக்னல் கோபுரம் கீழே சாய்ந்து விழுந்தது. மேலும், ரயில் நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி பறந்து சேதமடைந்தது.
கஜா புயலின் கோரத்தாண்டவம் காரணமாக டெல்டாவின் கடைமடைப் பகுதி அதிராம்பட்டினம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 100 அடி உயர சிக்னல் கோபுரம் கீழே சாய்ந்து விழுந்தது. மேலும், ரயில் நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி பறந்து சேதமடைந்தது.
கஜா புயலுக்கு பின் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்துவந்த நிலையில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் பணிகள் சிறிது இடைவெளிக்கு பின் மீண்டும் தொடங்கி உள்ளது.
தற்போது ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு, மழை நீர் வடிகால், பயணிகள் கழிப்பறை கட்டுமானம், தண்டவாளங்களில் ஜல்லிகள் நிரப்புதல், தண்டவாளங்கள் இணைப்பு, டிக்கட் கவுண்டர் அறை, நுழைவாயில் ரவுண்டான, நடைமேடை தடுப்பு சுவர், நடைமேடை தளம், மேற்படிக்கட்டு தளம், கேட் கீப்பர் அறை மற்றும் கேட் அமைக்கும் பணி ஆகியவை மும்முரமாக நடைபெறுகின்றன.
இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தது;
'திருவாரூர் ~ பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. கஜா புயலின் காரணமாக ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள சேத பகுதிகள் சீர் செய்யப்பட உள்ளது. எனவே, பணிகளை நிறைவு செய்வதில் ஓரிரு மாதங்கள் தாமதம் ஏற்படலாம்' என தெரிவித்தது.
அதிரை ரயில் நிலையத்திலிருந்து...
எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்)
'திருவாரூர் ~ பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. கஜா புயலின் காரணமாக ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள சேத பகுதிகள் சீர் செய்யப்பட உள்ளது. எனவே, பணிகளை நிறைவு செய்வதில் ஓரிரு மாதங்கள் தாமதம் ஏற்படலாம்' என தெரிவித்தது.
அதிரை ரயில் நிலையத்திலிருந்து...
எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.