.

Pages

Friday, November 30, 2018

அமீரகத்திலிருந்து மும்பைக்கு கடலடியில் ரயில் விடும் கனவுத்திட்டம்!

அதிரை நியூஸ்: நவ.30
அமீரகம் பல்வேறு அசாத்திய கனவுகளை நிஜமாக்கி வருவது அறிந்ததே இதனடிப்படையில் அமீரகத்தின் ஃபுஜைரா நகரையும் இந்தியாவின் மும்பை நகரையும் இணைக்கும் சுமார் 2,000 கி.மீ தூர அதிவேக கடலடி ரயில் திட்டம் ஒன்றை கனவாக கருக்கொண்டுள்ளது. இந்தத் திட்டம் எப்ப வரும், எப்படி வரும் என யாருக்கும் தெரியாது ஆனால் அமீரகத்தின் பொருளாதார சூழலும் இந்தியாவின் அரசியல் அமைதியும் ஒத்துழைக்குமேயானால் எதிர்காலத்தில் நிஜமாகும் வாய்ப்பும் உண்டு.

அமீரகம் ஏற்கனவே ஹைப்பர்லூப் (HYPERLOOP) எனப்படும் மிக அதிவேக குழாய் வடிவ பயணத்திட்டம், டிரைவரில்லா பறக்கும்கார்கள் என கற்பனைகளை சாத்தியமாக்கும் நடலடிக்கைகளின் இறுதிகட்டங்களில் உள்ளன. மேலும் அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை கடல்வழியாக இழுத்து வந்து குடிநீராக மாற்றும் முன்முயற்சி திட்டம் (PILOT PHASE) ஒன்று சிறியளவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.

இந்த கனவு கடலடி ரயில் திட்டம் சாத்தியமாகும் போது பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு மேல் இந்த ரயில் தடத்தை ஒட்டியே இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை பைப் லைன் வழியாக கொண்டு செல்லவும், மாற்று வழியில் இன்னொரு பைப் லைன் மூலம் மஹராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு வடக்கே பாயும் நர்மதை ஆற்றுநீரை ஃபுஜைரா கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளன.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.