அதிரை நியூஸ்: நவ.29
நடப்பு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி இந்தியர்கள் எதிர்வரும் 2019 ஜனவரி 1 முதல் பெருவாரியாக வேலைக்குச் செல்லும் அமீரகம், சவுதி, குவைத், மலேஷியா உள்ளிட்ட 18 இஸ்லாமிய நாடுகளுக்கு செல்வோர் மட்டும் கட்டாயமாக மீண்டும் ஆன்லைன் வழியாக பதிவு செய்து இமிக்கிரேசன் கிளியரன்ஸ் செய்து கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது
ஏற்கனவே ECNR கிளியரன்ஸ் பாஸ்போர்ட் உடையவர்கள் மற்றும் வேலைபார்த்து வருபவர்கள், முறையாக இமிக்கிரேசன் செய்து கொண்டு தற்போது இஸ்லாமிய நாடுகளில் வேலைபார்த்து வரும் ECR பாஸ்போர்ட் உடையவர்கள், புதிதாக வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும் மீண்டும் ஆன்லைன் வழியாக இமிக்கிரேசன் கிளியரன்ஸ் செய்து கொள்ளத் தவறினால் இந்திய விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் எச்சரித்திருந்தது ஆனால் ஊழல் பெருச்சாளிகள் தப்பித்து சென்று பதுங்கும் எந்த நாடுகளுக்கும் இத்தகைய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதால் மத்திய அரசின் ரகசிய உள்நோக்கம் ஏதுமிருக்குமோ என மக்கள் அச்சப்பட துவங்கினர், குறிப்பாக தென்னிந்தியர்கள்.
இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பலைகள் உருவானதை தொடர்ந்து இந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளதுடன் தொடர்ந்து சுய விருப்பத்தின் பேரில் ஆன்லைன் வழியாக இமிக்கிரேசன் கிளியரன்ஸ் பதிவும் செய்து கொள்ளலாம் என்ற சுய விருப்பு சலுகையையும் வழங்கியுள்ளது. வெளியுறவுத்துறையின் இந்த உத்தரவை அமீரகத்திற்கான இந்தியத் தூதர் நவ்தீப் சிங் சூரி அபுதாபியில் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த சட்டம் குறித்து துபையில் சட்ட ஆலோசணை நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிந்து சுரேஷ் செட்டூர் என்பவர் கூறியதாவது, இந்திய அரசின் இந்த உத்தரவு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியக் குடிமகன் ஒருவரின் சுதந்திரமான பயணத்தை தடுத்து நிறுத்த முறையான சட்டம் இயற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லது நீதிமன்ற உத்தரவை பெற்றிருக்க வேண்டும் அதைவிடுத்து ஆன்லைனில் பதிவு செய்யாத ஒருவரின் பயணத்தை தடுத்து நிறுத்த எந்த சட்டப்பூர்வ அனுமதியும் கிடையாது என்றார்.
அபுதாபியில் இயங்கும் கேரள சோஷியல் சென்டரின் தலைவர் ஏ.கே. பீரான் குட்டி தெரிவித்ததாவது, பயணியின் சுய விபரங்களும், வேலைவாய்ப்பு குறித்த விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது ஏன்? இந்தியாவில் பொதுத்தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் திரட்டப்படும் இந்தத் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புண்டு என அச்சம் தெரிவித்திருந்தார்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
நடப்பு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி இந்தியர்கள் எதிர்வரும் 2019 ஜனவரி 1 முதல் பெருவாரியாக வேலைக்குச் செல்லும் அமீரகம், சவுதி, குவைத், மலேஷியா உள்ளிட்ட 18 இஸ்லாமிய நாடுகளுக்கு செல்வோர் மட்டும் கட்டாயமாக மீண்டும் ஆன்லைன் வழியாக பதிவு செய்து இமிக்கிரேசன் கிளியரன்ஸ் செய்து கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது
ஏற்கனவே ECNR கிளியரன்ஸ் பாஸ்போர்ட் உடையவர்கள் மற்றும் வேலைபார்த்து வருபவர்கள், முறையாக இமிக்கிரேசன் செய்து கொண்டு தற்போது இஸ்லாமிய நாடுகளில் வேலைபார்த்து வரும் ECR பாஸ்போர்ட் உடையவர்கள், புதிதாக வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும் மீண்டும் ஆன்லைன் வழியாக இமிக்கிரேசன் கிளியரன்ஸ் செய்து கொள்ளத் தவறினால் இந்திய விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் எச்சரித்திருந்தது ஆனால் ஊழல் பெருச்சாளிகள் தப்பித்து சென்று பதுங்கும் எந்த நாடுகளுக்கும் இத்தகைய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதால் மத்திய அரசின் ரகசிய உள்நோக்கம் ஏதுமிருக்குமோ என மக்கள் அச்சப்பட துவங்கினர், குறிப்பாக தென்னிந்தியர்கள்.
இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பலைகள் உருவானதை தொடர்ந்து இந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளதுடன் தொடர்ந்து சுய விருப்பத்தின் பேரில் ஆன்லைன் வழியாக இமிக்கிரேசன் கிளியரன்ஸ் பதிவும் செய்து கொள்ளலாம் என்ற சுய விருப்பு சலுகையையும் வழங்கியுள்ளது. வெளியுறவுத்துறையின் இந்த உத்தரவை அமீரகத்திற்கான இந்தியத் தூதர் நவ்தீப் சிங் சூரி அபுதாபியில் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த சட்டம் குறித்து துபையில் சட்ட ஆலோசணை நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிந்து சுரேஷ் செட்டூர் என்பவர் கூறியதாவது, இந்திய அரசின் இந்த உத்தரவு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியக் குடிமகன் ஒருவரின் சுதந்திரமான பயணத்தை தடுத்து நிறுத்த முறையான சட்டம் இயற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லது நீதிமன்ற உத்தரவை பெற்றிருக்க வேண்டும் அதைவிடுத்து ஆன்லைனில் பதிவு செய்யாத ஒருவரின் பயணத்தை தடுத்து நிறுத்த எந்த சட்டப்பூர்வ அனுமதியும் கிடையாது என்றார்.
அபுதாபியில் இயங்கும் கேரள சோஷியல் சென்டரின் தலைவர் ஏ.கே. பீரான் குட்டி தெரிவித்ததாவது, பயணியின் சுய விபரங்களும், வேலைவாய்ப்பு குறித்த விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது ஏன்? இந்தியாவில் பொதுத்தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் திரட்டப்படும் இந்தத் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புண்டு என அச்சம் தெரிவித்திருந்தார்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.