.

Pages

Saturday, November 10, 2018

தாஜூல் இஸ்லாம் சங்கத்தில் மஹல்லாவாசிகளின் ஆலோசனைக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.10
அதிராம்பட்டினம் மேலத்தெரு மஹல்லாவாசிகளின் கலந்தாலோசனைக்கூட்டம், தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
நேற்று 09.11.2018 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி அளவில் தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் அழைப்பின் பெயரில் மேலத் தெரு வாசிகளில் கலந்தாலோசனை கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெருவின் முக்கியஸ்தர்கள், TIYA நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுகள் பின் வருமாறு:
1. தாஜுல் சங்க நிர்வாகிகளால் கடந்த வருடங்களில் நமது மரைக்கா மற்றும் செடியன் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இந்த வருடம் இதுவரை எடுத்து வருகிற நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார். மேலும் இனி நடக்க வேண்டிய அனைத்து காரியங்ககுக்கு அனைவரின் ஒத்துழைப்பையும் கோரினார்கள்.

2. கடந்த 2015-ம் ஆண்டு நமது சங்க நிர்வாகம் சார்பாக நமதூர் பஞ்சாயத் போர்ட் நிவாகத்திற்கு, நமது புதுக் குளத்தில் கலக்கும் கழிநீரை தடுத்து, அபுல் கடை அருகில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் இணைக்க ஒரு வாய்க்காலும், அதன் அருகிலுள்ள பாலத்தையும் சீர் செய்து தர கோரி அளிக்கப்பட்ட மனுவின் மீது பேரூராட்சி நிர்வாகத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்பினர்களோ, தற்போது இருக்கின்ற அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதை சங்க நிவாகிகள் மிகுந்த வருத்தத்துடன் சபையோருக்கு தெரிவித்தார்கள்.

3. கடந்த 2013-ம் ஆண்டு மரைக்காயர் குளத்திற்கு CMP வாய்க்காலில் தண்ணீர் கொண்டு வருபோது, சிதலமடைந்த வாய்க்காலை சீர் செய்ய வலியுருத்தி பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தோம். அதற்கு 10 பைப்புகள் வாங்கி தாருங்கள் என பேரூராட்சி தலைவர் கேட்டார் அதனை உடனே வாங்கி கொடுத்தோம். ஆனால் இன்றோடு 5 வருடங்கள் கழிந்த நிலையிலும் இதுவரை அந்த வாய்க்கால் பேருராட்சி நிர்வாகம் சீர் செய்து தரவில்லை என்ற தகவலையும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.

4. கடந்த காலங்களிலும் சரி அல்லது அன்மைகாலங்களிலும் சரி குளங்கள் சீரமைப்பை பொறுத்தவரை நமக்கு நாமே சீரமைத்து வந்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களிலும் குளங்களுக்கு தேவையான பணிகளை நமக்கு நாமே  சீரமத்துக் கொள்வோம் என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.