தஞ்சாவூர், ஜூலை 30
சிறுபான்மையினர் இன மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்து அரசு. அரசு உதவி பெறும் மற்றும் மைய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2019-20 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி. பாலிடெக்னிக், செவிலியர்/ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.
2019-20 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 135127 மாணவ, மாணவியர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மைய அரசால் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வி உதவித்தொகை மாணவ மாணவியர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும், பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ மாணவியர்கள் 15-10-2019 வரையிலும் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் 31-10-2019 வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவ மாணவியர்கள் அனைவரும் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும், ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி நிலையத்திற்கு அனுப்பாத மாணவ மாணவியர்களின் இணையதள விண்ணப்பங்கள் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
இணையதளத்தில் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கவனமுடன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் எந்த நிலையிலும் மாற்றவோ திருத்தவோ இயலாது, மாணவ மாணவியரின் ஆதாரர் எண்கள் விண்ணப்பங்களை பரிசீலணை செய்யும் அலுவலர்களுக்கு இணையதளத்தால் பகிரப்படமாட்டாது.
கல்வி நிலையங்கள் ஆன்லைன் மு்லம் பெறப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சான்றாவணங்களுடன் பரிசீலித்து தகுதி பெற்ற விண்ணப்பங்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்படவேண்டும்.
பள்ளிகள்-கல்வி நிலையங்கள், மைய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் (NSP) புதிய கல்வி நிலையங்களை இணைப்பதற்கு DISE/AISHE/NCVT குறியீட்டு எண் அவசியமாகும், புதிய கல்வி நிலையங்கள் NSP இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் (Nodal Officer) விவரங்களை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் இரு நகல்களில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும், கல்வி நிலையங்களின் பாடப்பிரிவில் மாற்றம் இருப்பின் உடன் திருத்தம் செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர்கள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய DISE/AISHE குறியீட்டு எண்ணை மாணவ மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான / இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தணைகள் அடங்கிய விரிவான விபரங்கள் http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes minorities.htm. என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், இத்திட்டம் தொடர்பான மைய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். என இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினர் இன மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்து அரசு. அரசு உதவி பெறும் மற்றும் மைய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2019-20 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி. பாலிடெக்னிக், செவிலியர்/ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.
2019-20 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 135127 மாணவ, மாணவியர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மைய அரசால் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வி உதவித்தொகை மாணவ மாணவியர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும், பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ மாணவியர்கள் 15-10-2019 வரையிலும் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் 31-10-2019 வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவ மாணவியர்கள் அனைவரும் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும், ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி நிலையத்திற்கு அனுப்பாத மாணவ மாணவியர்களின் இணையதள விண்ணப்பங்கள் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
இணையதளத்தில் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கவனமுடன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் எந்த நிலையிலும் மாற்றவோ திருத்தவோ இயலாது, மாணவ மாணவியரின் ஆதாரர் எண்கள் விண்ணப்பங்களை பரிசீலணை செய்யும் அலுவலர்களுக்கு இணையதளத்தால் பகிரப்படமாட்டாது.
கல்வி நிலையங்கள் ஆன்லைன் மு்லம் பெறப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சான்றாவணங்களுடன் பரிசீலித்து தகுதி பெற்ற விண்ணப்பங்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்படவேண்டும்.
பள்ளிகள்-கல்வி நிலையங்கள், மைய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் (NSP) புதிய கல்வி நிலையங்களை இணைப்பதற்கு DISE/AISHE/NCVT குறியீட்டு எண் அவசியமாகும், புதிய கல்வி நிலையங்கள் NSP இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் (Nodal Officer) விவரங்களை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் இரு நகல்களில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும், கல்வி நிலையங்களின் பாடப்பிரிவில் மாற்றம் இருப்பின் உடன் திருத்தம் செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர்கள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய DISE/AISHE குறியீட்டு எண்ணை மாணவ மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான / இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தணைகள் அடங்கிய விரிவான விபரங்கள் http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes minorities.htm. என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், இத்திட்டம் தொடர்பான மைய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். என இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.