.

Pages

Monday, July 22, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கல்லூரியில் திங்கட்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம். முகமது முகைதீன் தலைமை வகித்தார். கல்லூரிப் பேராசிரியர்கள் மேஜர் எஸ்.கணபதி, ஏ.அம்சத், எஸ். சாபிரா பேகம் ஆகியோர் கலந்துகொண்டு மழை நீரை சேமிப்பதன் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துரைத்தனர். மேலும், மழைநீரை சேமிப்பதில் மாணவர்களின் பங்கு மிகவும் அவசியம் என்றும், இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை உயர்த்த அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றனர். இதைத் தொடர்ந்து, மழை நீரை சேமிக்கும் வரைபடம் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் ஜெ.முகமது அலி, ஏ.அப்ரூஸ் பானு, ஜி.ஆர் ஞானராஜா, ஜெ.சாஜித் இக்பால் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.