.

Pages

Friday, July 5, 2019

திருவாரூர் ~ காரைக்குடி தடத்தில் தினமும் 4 முறை ரயில் சேவை? தெற்கு ரயில்வே ஆலோசனை!

அதிராம்பட்டினம், ஜூலை 05
திருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தில் விரைவில் தினமும் 4 முறை 3 பெட்டிகளுடன் கூடிய டெமு ரயிலை இயக்க திருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தில் விரைவில் தினமும் 4 முறை 3 பெட்டிகளுடன் கூடிய டெமு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த விவரம்:
தினமும் 3 பெட்டிகளுடன் திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 12.30 மணிக்கு காரைக்குடி சென்றடையவும், அதேபோல, காரைக்குடியிலிருந்து (வண்டி எண்: 06848) 3 பெட்டிகளுடன் காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 12.30 மணிக்கு திருவாரூர் சென்றடையவும்,  பின்னர் திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கும், மறுமுனையில் காரைக்குடியில் இருந்து திருவாரூருக்கும் பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு இரவு 7 மணிக்கு சென்றடையவும், இதற்கான கால அட்டவணை தயாரிப்பது குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

ரயில் பயணிகள் கோரிக்கையை ஏற்று, திருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தில் தேவையான கேட் கீப்பர்களை நியமித்து, தற்போதுள்ள 6 மணி நேர பயண நேரத்தை 5 மணி நேரமாக குறைத்து, தினசரி ரயில் சேவையை 4 முறையாக அதிகரிக்கச் செய்ய தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவதாகவும், விரைவில் திருவாரூர் ~ காரைக்குடி தடத்தில் தினமும் 4 முறை ரயில் சேவைக்கான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தெரிகிறது."

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.